Untitled Document
May 20, 2024 [GMT]
 
எதற்காக நாம் நிம்மதியாக தூங்க வேண்டும் ?
[Saturday 2016-02-13 20:00]

நாம் தினமும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக செயல்பட தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். தினமும் குறைந்தது 7-8 மணிநேரமாவது தூங்கினால் மட்டுமே உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கும் என பலதரப்பட்ட ஆய்வுகள் கூறிவருகின்றன.

* சரியான அளவில் தூங்காவிட்டால், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும். மேலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதோடு, மன அழுத்தத்தை உண்டாக்கும்.

* ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து, அதுவே உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும்.


தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
[Saturday 2016-02-13 20:00]

மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் மருத்துவர்களும் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துரைப்பார்கள். அதிலும் சுடுநீர் குடிப்பது நல்லது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதிலும் காலையில் எழுந்ததும் சுடுநீர் குடித்து வந்தால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். குறிப்பாக சுடுநீரை காலையில் வெறும் வயிற்றில் மட்டுமின்றி, நாள் முழுவதும் குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.


நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா?
[Friday 2016-02-12 20:00]

சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரிய ஆசைப்பட்டிருப்பீர்கள். அல்லவா? உங்கள் ஆவலை பூர்த்தி செய்வதுதானே என் விருப்பம். இதோ... பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.


உடல் ஆரோக்கியத்தை தேடி பயணிக்கும் இயந்திர உலகில் கீரை!
[Friday 2016-02-12 20:00]

உடல் ஆரோக்கியத்தை தேடி பயணிக்கும் இயந்திர உலகில், இயற்கை மருந்தாய் கிடைத்திருப்பது காய்களும், பழங்களும். இதில், தான் நம் உடலுக்கு தேவையான, அனைத்து முக்கிய சத்துக்களும் நிறைந்துள்ளன. காய்கறி நிறம், மணம், சுவையை உள்ளடக்கியது. காய்கறிகளில் இருந்து மாவுச்சத்து, புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை கிடைக்கிறது. காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள், நார்ச்சத்து:- காய்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கலை தவிர்க்கிறது. உணவுக்குழாயில் எளிதாக பயணிக்க நார்ச்சத்து உதவும்.


மனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள் சில !
[Thursday 2016-02-11 23:00]

நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உண்மமைக‌ள் வெ‌ளிவ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அதில் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம், அதிர்‌ச்‌சியையு‌ம் கூட ஏற்படு‌த்து‌ம். அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இங்கே.. பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ.பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.


இயற்க்கை மருத்துவம் பற்றிய குறிப்புகள்! :
[Thursday 2016-02-11 22:00]

இயற்கை மருத்துவம் சொல்லும் அரிய குறிப்பகள் இவை..

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).


மூவேளையும் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
[Thursday 2016-02-11 18:00]

மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் மருத்துவர்களும் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துரைப்பார்கள். அதிலும் சுடுநீர் குடிப்பது நல்லது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதிலும் காலையில் எழுந்ததும் சுடுநீர் குடித்து வந்தால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். குறிப்பாக சுடுநீரை காலையில் வெறும் வயிற்றில் மட்டுமின்றி, நாள் முழுவதும் குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.


வீட்டில் பெண் குழந்தைகளை தினசரி விளக்கேற்றும்படி செய்தால் கிடைக்கும் பலாபலன்கள்.
[Thursday 2016-02-11 12:00]

இப்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்குகூடும்


நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்கிறார்கள்!
[Wednesday 2016-02-10 23:00]

நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுப்போன்று நெய்யில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. அதே சமயம் இதில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


கான்சர் செல்களை அழிக்கும் வசாபி...
[Wednesday 2016-02-10 22:00]

ஷங்கரின் எந்திரன் படத்தில்,


கூட்டில் அடைக்க முடியாத மிருகம் Honey Badger !
[Wednesday 2016-02-10 18:00]

ஆப்பிரிக்காவில் மேய்ச்சல் நிலங்களில் வாழும் ஹனி பெட்சர் (Honey Badger) அல்லது ரெடெல் (Ratel) என்ற மிருகம் உலகின் மிக அறிவார்ந்த விலங்காக இந்த மிருக இனம் கருதப்படுகின்றது. குறித்த மிருகத்தை கூட்டில் அடைப்பதற்கு எவ்வளவு முயற்சித்தாலும் அது வீண் முயற்சியாகும். BBC TWOவினால் வெளியிடப்பட்டுள்ள காணொளியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மிருகத்தின் அறிவு மற்றும் நுட்பமான மூளை குறித்து இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


டூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது என்கின்றனர் அயர்லாந்துகாரர்கள்!
[Tuesday 2016-02-09 23:00]

அயர்லாந்தில் உள்ள ஏத்லோன் தொழில்நுட்ப மையம் நடத்திய ஆராய்ச்சியில் நீங்கள் பயன்படுத்தும் டூத்பேஸ்ட்டை விட ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் நல்ல பயனளிக்கிறது என கண்டறியப்பட்டது.

தேங்காய் எண்ணெய் எப்படி?

தேங்காய் எண்ணெய் உங்கள் பற்களில் சுத்தப்படுத்தவும், சொத்தை போன்ற சேதம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

பக்கவிளைவுகள்..


பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
[Monday 2016-02-08 07:00]

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது. பூண்டு இதயநோயுடன் போராடி இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது, மேலும் ஜலதோஷத்தை குணமாக்க உதவி புரிகிறது. நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாய் நிற்கும் பூண்டு புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. பூண்டில் விட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன. இந்த பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் சிலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.


இந்திய தாம்பத்ய வாழ்வியல் கலாசாரப்படி..! வயதில் மூத்த மனைவி வாழ்க்கைக்கு வரமா!
[Sunday 2016-02-07 19:00]

இந்திய தாம்பத்ய வாழ்வியல் கலாசாரப்படி திருமணத் தம்பதிகளில் பெண்ணிற்கு வயது குறைவாகவும், ஆணிற்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன. தன்னோடு வாழ்க்கையில் இணையும் பெண்ணை ஆண்தான் வழிநடத்தவேண்டும் என்பதாலும், உலக அனுபவம் ஆண்களுக்கு அதிகம் என்பதாலும் கணவர், மனைவியைவிட வயதில் சற்று அதிகமானவராக இருக்கவேண்டும் என்ற நியதி வகுக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அப்போதும் பெண்கள் சிந்திக்கும் திறன் படைத்தவர்களாகவே இருந்தபோதிலும் அவர்களின் சிந்தனையை அவ்வளவாக அங்கீகரிக்கவில்லை. எதிர்த்து கேள்வி கேட்பதை தடுத்தார்கள். எப்போதும் அடங்கி நடக்கவேண்டும் என்றார்கள். அதனால் வயதிலும் தன்னைவிட பெண் குறைவாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அதற்காகத்தான் தங்களைவிட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்தார்கள் என்ற கருத்தொன்று உண்டு.


இரவு உணவுக்கு பின் வாழைப்பழம்..!
[Saturday 2016-02-06 07:00]

இரவு உணவினை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அந்த உணவு செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கச்செல்வார்கள். மேலும், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது என்று அனைத்து மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள். இரவு உணவிற்குப் பின் எந்த பழமும் சாப்பிடுவது நல்லது கிடையாது. அதிலும் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை. ஏனென்றால், அதில் உள்ள Fructose என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும். இதன் காரணமாக உடலில் கலோரி அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும். ஒரு சிலர் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்கள் சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம்.


சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன?
[Friday 2016-02-05 07:00]

சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர். மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.


குழந்தை வரம் பெற ஆலோசனைகளும் கை வைத்திய முறைகளும் !
[Friday 2016-02-05 00:00]

குழந்தையில்லாதவர்களுக்கு மாதவிடாய் ஆன ஐந்து தினங்களிலும் ஒரு வெள்ளைப்பூண்டு சிறிது வேப்பங்கொழுந்து ஒரு சிறிய விரலி மஞ்சள் துண்டு வைத்து அம்மியில் அரைத்து சாப்பிடச்சொல்வார்கள். இப்படி சில மாதம் சாப்பிட்டு தீட்டு நின்று கர்ப்பம் தரித்துவிடும். குழந்தை வேண்டுவோர் பாலமுருகன் அல்லது முருகக்கடவுளை வணங்கச்சொல்வார்.மேற்படி எளிய முறையில் மருந்து சாப்பிட்ட அனேகருக்கு குழந்தை பிறந்துள்ளது. சில எளிய பாட்டி வைத்திய முறையும் , பயனுள்ளதாக இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். சித்தர்களின் மூலிகை மருத்துவத்திலும் இதைப் பற்றிய பல குறிப்புகள் கிடைக்கப் பெறுகிறோம்.. அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின் குடித்து வர குழந்தை பேறு கிடைக்கும்.


அத்திப் பழம் பற்றிய மருத்துவக்குறிப்பு:
[Thursday 2016-02-04 19:00]

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,

2.மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,

3.நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.


சிறுநீரகத்தை காக்கும் உணவுமுறை..
[Wednesday 2016-02-03 07:00]

நம் உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலை எது?' எனக் கேட்டால்


தினம் ஒரு பேரிக்காய் சாப்பிடுங்கள் எலும்புகளுக்கு வலிமைபெருகும் !
[Tuesday 2016-02-02 23:00]

எலும்புகளுக்கு வலிமை தரும் பேரிக்காய் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அடங்கியுள்ள சத்துக்கள் 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ச்சத்து, விட்டமின் சி, பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸி-சான்தின் போன்ற சத்துக்களும், தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகளும், ஏ, பி, பி2 போன்ற விட்டமின்களும் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி- குழும விட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படுகின்றன.


தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க முருங்கைக்கீரை உகந்தது:
[Tuesday 2016-02-02 12:00]

இலைகள் மிகவும் சத்தான பகுதியாகும். இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக உடலில் இரத்தணுக்கள் குறைவாக இருந்தால், இரத்த சோகை ஏற்படும். இத்தகைய இரத்த சோகையானது ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. இரத்த சோகை குழந்தைகளுக்கு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவிழந்து, சருமம், சுவாசப் பாதை, செரிமான மண்டலம் போன்றவற்றில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.


அன்றாடம் பாவிக்கும் குளியல் சோப்..! இத்தனை வகையா?
[Sunday 2016-01-31 15:00]

உங்கள் அழகான சருமத்தில் தினமும் குறைந்தது இரண்டு தடவையாவது சோப்பு தேய்க்கிறீர்கள். நுரை வருகிறது.. மணம் தருகிறது.. என்று சொல்லும் பலருக்கும் அதில் என்னென்ன மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றோ, தனது சருமத்திற்கு அது பொருத்தமானதுதானா என்றோ தெரிவதில்லை.

சோப்பின் ரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்:

* ஒருவகை உப்புதான் சோப்பின் மூலப்பொருள். அதில் காரத்தன்மை பொருந்திய ஆல்கலைனையும், தாவர கொழுப்புகளையும் சரியான விகிதத்தில் சேர்க்கும்போது குளியல் சோப் தயாராகிறது. நிறத்திற்கான பொருளும், வாசத்திற்கான பொருளும் அதில் சேர்க்கப்படுகிறது.

சிக்கனுக்கும், எலுமிச்சை பழத்திற்கும் என்ன சம்பந்தம்?
[Saturday 2016-01-30 20:00]

உணவே மருந்து, மருந்தே உணவு


அப்பிள் நிறுவனம் தனது புதிய iPadல் பல்வேறு வசதிகளை புகுத்தியுள்ளது!
[Saturday 2016-01-30 19:00]

தனது ஒவ்வொரு அறிமுகம் மூலமும் மக்களை திரும்பி பார்க்கவைக்கும் அப்பிள் நிறுவனம் தனது புதிய iPadல் பல்வேறு வசதிகளை புகுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை போன்று ஐபேடும் வாடிக்கையாளர்களை நன்கு கவர்ந்துள்ளது. இதன் காரணமாகவே iPad 1, 2,3,4 மற்றும் iPad Air,2 என ஏராளமான வகைகளை அப்பிள் நிறுவனம் அறிமுகம்படுத்தியது. கடைசியாக கடந்த நவம்பர் மாதம் தனது iPad Pro மொடலை அறிமுகப்படுத்தியது அப்பிள் நிறுவனம். ஆனால் அதன் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தற்போது அடுத்த மாடலான iPad Air 3யின் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


செவ்வாழையும் மகப்பேறுக்கு அருமருந்து: - தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர கருத்தரிக்குமாம்!
[Saturday 2016-01-30 19:00]

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.


சரஸ்வதி மூலிகை என்று அழைக்கப்படும் வல்லாரையும் முதன்மை நோய் நிவாரணியே!
[Friday 2016-01-29 22:00]

எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை. இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும். காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம். இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.


இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஆயுள் பெருகும்:
[Friday 2016-01-29 19:00]

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். * இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும். * பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். * எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும். * ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். * பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும். * விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.


கோவிலுக்கு செல்லும் பொழுது தங்க நகை அணிய வேண்டும் ஏன் தெரியுமா?
[Thursday 2016-01-28 23:00]

கோவில்கள் அமைந்திருக்கும் இடம், அமைப்பு, உள் கட்டமைப்பு, கதவுகள், கொடிமரம், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள்பிரகார பாதை என, ஒவ்வொன்றும் அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம் தொடர்புடையவை. பொதுவாக, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள், ஆழ்ந்த இடங்கள் தான், கோவில் கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இங்கு தான் காந்த அலைகள், நேர்மறையான எண்ண அலைகள், அதிகமாக பரவியிருக்கும். வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, மக்கள் பாதுகாப்பாக இருக்க, பிரமாண்டமான கோவில்கள் தான் பயன்பட்டன. மிக மிக அதிகமான காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளை பதித்து, அதன் மீது சிலையை அமைத்து, மூலஸ்தானம் உருவாகும். அதன்பின் தான் கோவில் கட்டப்படும். அந்த செப்பு தகடுகளின் தன்மை, பல நல்ல அலைகளை கிரகித்து, அதை பல மடங்காக, அந்த சிலை மூலம் வெளிக்கொணரும்.


காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்! -
[Thursday 2016-01-28 19:00]

* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்


செக்ஸ் மூலமும் பரவக்கூடியதாம் ஜிக்கா வைரஸ்: - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
[Thursday 2016-01-28 19:00]

தென் அமெரிக்க நாடுகளில் கொசுக்கள் மூலம் பரவும் ஜிக்கா வைரஸ் உடலுறவு மூலமும் பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.தென் அமெரிக்க நாடுகளில் கொசுக்கள் மூலம் ஜிக்கா வைரஸ் பரவி வருகிறது. ஜிக்கா வைரஸால் கருவில் உள்ள குழந்தைகளின் மூளை வள்ர்ச்சி பாதிப்பு அடைந்து அவர்கள் சிறிய தலையுடன் பிறக்கிறார்கள். இதனால் தென் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் ஜிக்கா வைரஸ் உடலுறவு மூலமும் பரவுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தென் பசிபிக் கடலில் 118 தீவுகளை உள்ளடக்கிய பிரெஞ்சு பாலினேசியாவைச் சேர்ந்த 44 வயது நபரின் விந்தணுவில் ஜிக்கா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கொலரடோவைச் சேர்ந்த விஞ்ஞானியான பிரையன் டி. ஃபாய் செனகலுக்கு சென்று வந்த பிறகு அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா