Untitled Document
April 26, 2024 [GMT]
தொண்டமானாறில் கிணற்றில் வயோதிபரின் சடலம்!
[Monday 2023-02-13 17:00]

யாழ்ப்பாணம் - தொண்டமானாறு பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. கெருடாவில் தெற்கு தொண்டைமானாற்றைச் சேர்ந்த ஆரன் பாலசிங்கம் (வயது- 71) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


20 பவுண் , 5 இலட்சம் ரூபா கொள்ளை! - முகமூடிக் கொள்ளையர்கள் கைவரிசை!
[Wednesday 2023-02-01 17:00]

முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் 20 பவுண் நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து கொண்டு சென்றுள்ளார்.


வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்!
[Sunday 2022-12-04 16:00]

இலங்கையில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜி விஜேசூரிய மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


பணிப்பெண்ணுக்குப் பிறந்த சிசுவைக் கொன்ற வைத்தியர் சிக்கினார்!
[Tuesday 2022-07-26 18:00]

மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் வேலைக்காரியாக கடமையாற்றி வந்த பெண் ஒருவருக்கு பிறந்த சிசு ஒன்றை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே விசேட ரயில் சேவை!
[Thursday 2022-06-16 17:00]

யாழ்ப்பாணம் - கொழும்பு விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ். புகையிரத நிலைய அதிபர் தி. பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மஹிந்தவுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு - 4ஆம் திகதி விசாரணை!
[Friday 2022-06-10 16:00]

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
[Friday 2022-06-10 16:00]

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாட்டின் பல பாகங்களில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து குறித்த ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


லொக்டவுணுக்கு மத்தியிலும் விபத்துகளில் 2,470 பேர் பலி!
[Sunday 2022-02-20 09:00]

கடந்த ஆண்டு கொவிட் அச்சுறுத்தலால் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும் 22,000 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, 2,470 பேர் உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


யாழ்ப்பாண ஆலய சிலைகளை ஆட்களை வைத்து கொள்ளையடித்த கொழும்பு வர்த்தகர்!
[Saturday 2021-12-25 18:00]

யாழ்ப்பாணத்தில் சிலைகளை கடத்தி விற்று வந்த இருவர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்றும் 18 பேர் பலி!
[Sunday 2021-10-24 18:00]

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 10 ஆண்களும் 08 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,611 ஆக அதிகரித்துள்ளது.


மன்னாரில் 15 பேர் ட்ரோனிடம் சிக்கினர்!
[Sunday 2021-05-30 19:00]

மன்னாரில், இன்று முன்னெடுக்கப்பட்ட ட்ரோன் கமெரா கண்காணிப்பின் மூலம், 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை, விமானப்படை மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து ட்ரோன் கமெராவைப் பயன்படுத்தி, மன்னார் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்துள்ளனர்.


கனகராயன்குளத்தில் முதியவர் அடித்துக் கொலை!
[Saturday 2020-08-22 17:00]

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டொன்றின் அருகில் சடலம் இருப்பது தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை அடையாளப்படுத்தியதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


வவுனியா விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!
[Monday 2020-05-25 19:00]

வவுனியா- ரயில் நிலைய வீதியில் கடந்த 15 ஆம் திகதி மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


வயல்வெளியில் கிடந்த கஞ்சா பொதி!
[Thursday 2019-12-26 16:00]

யாழ்ப்பாணம், நாச்சிஅம்மன் கோவில் அருகே உள்ள வயலில் இருந்து 6 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.யாழ். விசேட பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே கேரள கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. இந்த கஞ்சா பொதியின் நிறை 6 கிலோ 540 கிராம் என்றும் இதன் பெறுமதி, 1 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


45 பவுண் நகைகள் அபகரிப்பு!
[Saturday 2019-08-31 16:00]

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களின் நகைகளைத் திருடி இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பெண்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டை உரிய முறையில் முன்வைக்க பொலிஸார் தவறியதால், சந்தேகநபர்களை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.


துப்பாக்கி, குண்டுகளுடன் கார் சிக்கியது! - நால்வர் கைது
[Saturday 2019-05-25 09:00]

பிலியந்தலை, கடிகம பிரதேசத்தில் ஆயுதங்கள், கைக்குண்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றை நேற்று காலை சோதனை செய்ததாகவும், அதிலிருந்து ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டு கைப்பற்றப்பட்டதோடு, இச்சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


ஆவா குழுவினர் 9 பேருக்கும் விளக்கமறியல்!
[Wednesday 2018-12-19 18:00]

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா நேற்று உத்தரவிட்டார்.


மாட்டினார் இராணுவ மேஜர்!
[Friday 2018-10-26 08:00]

ரி56 ரக துப்பாக்கிகளின் 2,958 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட இராணுவத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சியம்பலாண்டுவ, தொம்பகஹவெல பிரதேசத்தில் வேன் ஒன்றில் ரி56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 2,958 கைப்பற்றப்பட்டதோடு 9 மில்லி மீற்றர் வகை தோட்டாக்கள் 32 உம் கைப்பற்றப்பட்டன.


சாவகச்சேரியில் சிசுவின் சடலம் மீட்பு!
[Wednesday 2018-03-07 19:00]

சாவகச்சேரிப் பகுதியில் ன்று காலை சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பழைய மீன் சந்தை கட்டடத்தின் காணியொன்றுக்குள் இருந்தே குறித்த சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறொரு பிரதேசத்திலிருந்து சிசுவின் சடலம் குறித்த பகுதியில் கொண்டு வந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


அத்துமீறிய 8 இந்திய மீனவர்கள் கைது!
[Tuesday 2017-10-17 18:00]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பிராந்தியத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் இந்திய மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், படகொன்றும் தலைமன்னார் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.


மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து மாணவி காயம்!
[Saturday 2017-07-29 20:00]

சாவகச்சேரி


விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துவதா என்று அடுத்த அமர்வில் அறிவிப்பு!
[Thursday 2017-05-25 18:00]

வடமாகாணசபை அமைச்சர்கள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்து வந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையை தாம் ஆராய்ந்து வருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 93ஆவது அமர்வு இன்று இடம்பெற்றது. அதன்போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


தமிழ் ஊடகங்களை புறக்கணிக்கும் நீதி அமைச்சர்!
[Saturday 2016-12-24 08:00]

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தமிழ் ஊடகங்களை புறக்கணித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்தனர். வவுனியா மாவட்டத்திலுள்ள மடுகந்தை, கொக்கெலிய ஆகிய இரு கிராமங்களுக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர், அங்குள்ள பௌத்த பிக்குகளையும், மக்களையும் சந்தித்திருந்தார். அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகத் திட்டத்தையும் அப்பகுதிகளில் ஆரம்பித்து வைத்தார்.


புதிய அரசியலமைப்பு குறித்து ஜனவரியில் விவாதம்!
[Tuesday 2016-12-13 08:00]

புதிய அரசியல் அமைப்பு குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் விவாதம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். சீன அரசாங்க ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது இன்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


கச்சதீவு புதிய ஆலயம் 23 ஆம் திகதி திறப்பு!
[Sunday 2016-12-11 19:00]

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் புதிய கட்டடம் எதிர்வரும் 23ம் திகதி திறக்கப்பட உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டு தோறும் இரு நாட்டு பக்தர்களும் இணைந்து கொண்டாடும் விழாவாக இருந்து வருகிறது. இந்தத் தேவாலயம் மிகவும் பழைமையான கட்டடத்தில் செயல்பட்டு வந்ததால், அதற்கு அருகில் புதிதாக மற்றொரு அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.


பொருத்து வீட்டுத் திட்டம் - நாடாளுமன்றத்தில் சுவாமிநாதனுடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் மோதல்!
[Wednesday 2016-12-07 07:00]

பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, கடற்றொழில் மற்றும் நீரியல்வழ அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதங்கள் நேற்று இடம்பெற்றன.


நெடுந்தீவு கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்கள் கைது!
[Sunday 2016-01-17 18:00]

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இந்திய மீனவர்களை கடற்படையினர், நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளதுறை திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப்பணிப்பாளர் ப.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் பரப்புரைக் கூட்டங்களை நடத்தும் தமிழரசுக் கட்சி!
[Sunday 2016-01-10 18:00]

இலங்கை தமிழரசுக் கட்சி, தேர்தல் தொகுதிகள் தோறும் கூட்டங்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பருத்தித்துறை, உடுவில் மற்றும் கோப்பாய் பிரதேசங்களிலேயே இவ்வாறான கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.தமிழரசுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்களே இந்தக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா