Untitled Document
May 20, 2024 [GMT]
இனி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தான் நடிப்பேன்: - சமந்தா
[Monday 2016-01-04 07:00]

தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழிலும் அப்படித்தான் என்றாலும், இவர் கொடுத்த ஹிட் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.கத்தி படம் மட்டுமே இவருக்கு ஹிட், ஆனால், அந்த படத்தில் இவருக்கு பெரிதாக நடிக்கும் வாய்ப்பே இல்லை. இந்நிலையில் இந்த வருடம் வந்த தங்கமகன், 10 எண்றதுக்குள்ள படமும் தோல்வியை தழுவியது.இதனால் அடுத்து 24, வடசென்னை இந்த படங்களை நம்பி தான் சமந்தா உள்ளாராம். மேலும், இனி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம்.


உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள
[Sunday 2016-01-03 00:00]

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம்


ரஜினியையும் அக்‌ஷய் குமாரையும் மோதவிட்ட ஷங்கர்!
[Saturday 2016-01-02 22:00]

ஷங்கர் இந்திய சினிமாவே வியக்கும் அளவிற்கு 2.O படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க அவருக்கு வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்படத்தின் ரஜினியும், அக்‌ஷய் குமாரும் மோதும் பிரமாண்ட சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டதாம்.இதற்காக பல ரோபோக்கள் சென்னை வந்து இறங்கியுள்ளது. இதில் அக்‌ஷய் குமாரும் ஒரு ரோபோட் தானாம்.சமீபத்தில் சிட்டியும், அக்‌ஷய் குமாரும் மோதுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.


சூர்யா, நிவின் பாலி, பிரபாஸ், என பல நடிகர்கள் நடிக்கும் ஆல்பத்தை தயாரிக்கவுள்ள விக்ரம்!
[Saturday 2016-01-02 22:00]

விக்ரம் நல்ல நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர் தற்போது இயக்குனர் அவதாரம் கூட எடுக்கவுள்ளார்.ஆனால், இவை படத்திற்கு அல்ல, சென்னையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு எழுந்தது குறித்து விக்ரம் ஒரு ஆல்பத்தை இயக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே.இந்த ஆல்பத்தில் சூர்யா, நிவின் பாலி, பிரபாஸ், புனீத் ராஜ்குமார், ஆர்யா, விஷால் ஆகியோர் நடிக்கவுள்ளார்களாம்.


சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் சிங்கம் 3 : - அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள படப்பிடிப்பு
[Saturday 2016-01-02 21:00]

சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் சிங்கம் 3-யின் படப்பிடிப்பு அடுத்தவாரம் ஆரம்பமாகிறது.


தயாரிப்பாளராக களமிறங்கும் அதர்வா...!
[Saturday 2016-01-02 09:00]

சில படங்களில் நடித்துவிட்டு, அதில் சம்பாதித்த பணத்தை திரும்பவும் சினிமாவிலேயே முதலீடு செய்யும் வழக்கம் ஒன்றும் புதியதல்ல. கமல், தனுஷ், விஷால், சூர்யா, சிம்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.இந்த பட்டியலில் இப்போது இணைந்திருப்பவர் அதர்வா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஈட்டி படம் நல்ல வசூல் செய்த மகிழ்ச்சியில் இருக்கும் அவர், இப்போது "KIICKASS Entertainments" என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்.தன்னை சினிமாவில் அறிமுகபடுத்திய இயக்குனர் பத்ரிவெங்கடேஷின் அடுத்த படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


தமிழ் ரசிகர்கள் மீது நான் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன்: - எமிஜாக்சன்
[Saturday 2016-01-02 09:00]

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில்


ஒரு நாளில் ஐந்து லட்சம் பேர் பார்த்த சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் ட்ரைலர்!
[Saturday 2016-01-02 08:00]

சிம்புவின் பீப் சாங் பிரச்சனை தற்போது தான் ஓரளவிற்கு அமைதியாகிவுள்ளது. இந்நிலையில் நேற்று இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.இந்த ட்ரைலர் 1 நாளில் 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அது மட்டுமின்றி 11,900 பேருக்கு மேல் லைக்ஸ் செய்துள்ளனர்.எப்போதும் விஜய், அஜித் படங்களுக்கு தான் இந்த அளவிற்கு ஒரு வரவேற்பு கிடைக்கும், இதன் மூலம் அவர்களுக்கு அடுத்த இடத்தில் சிம்பு வந்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.


தனுஷுடன் நடிக்க மறுத்த ஜீவா...
[Saturday 2016-01-02 08:00]

தனுஷ் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர் மட்டுமின்றி இன்னும் 2 முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளதாம்.இதில் நடிக்க விஜய் சேதுபதி, ஜீவாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. விஜய் சேதுபதி எப்படியும் சம்மதிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.ஆனால், ஜீவா இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாரயணன் கமிட் ஆகியுள்ளனர்.


பார்க்க முத்தம் மாதிரி இருந்தாலும்,அவை போலி முத்தம்: கதகளி முத்தக்காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்
[Saturday 2016-01-02 08:00]

விஷால் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வரவிருக்கும் படம் கதகளி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கேத்ரின் நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலரில் விஷால், கேத்ரினை முத்தமிடுவது போல் ஒரு காட்சி வருகிறது, இதுக்குறித்து சமீபத்தில் படத்தின் இயக்குனர் பாண்டிராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பாண்டிராஜ் கூறுகையில்


சிம்பு இளம் கலைஞர் அவருக்கு நாம் தான் உதவ வேண்டும் - ரகுமான்
[Friday 2016-01-01 22:00]

தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு எடுத்து சென்றவர் ரகுமான். இவர் தற்போது அச்சம் என்பது மடமையடா, 24 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.இந்நிலையில் நேற்று அச்சம் என்பது மடமையடா படத்தின் டீசர் வெளிவந்தது. இவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.மேலும், நேற்று டீசரை வெளியிடலாம் என முடிவு செய்தது ரகுமான் தானாம், நம் துறையை சார்ந்த ஒரு இளம் கலைஞருக்கு பிரச்சனை, பீப் சாங்கால் மிகவும் வேதனையில் இருக்கும் சிம்புவிற்கு, இந்த நேரத்தில் டீசர் வந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.இதனால், இந்த நேரம் தான் டீசர் வெளியிட சரியான நேரம் என அவர் கூறியதால் தான் டீசர் நேற்று மிக வேகமாக ரெடியாகியதாம்.


ஒன்பது படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி!
[Friday 2016-01-01 22:00]

தமிழ் திரைப்பட ஹீரோக்களில் தற்போது அதிக படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. 'நானும் ரவுடிதான்' பட வெற்றிக்குப்பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. விஜய் சேதுபதி ஏற்கனவே ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் 'மெல்லிசை', கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'இறைவி', சீனு ராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்' படங்களில் நடித்து வந்தார். அதை தொடர்ந்து நலன்குமாரசாமி இயக்கத்தில் 'காதலும் கடந்து போகும்', அருண்குமார் இயக்கும் 'சேதுபதி' படங்களில் நடிக்கிறார். இப்போது சீனு ராமசாமியின் மற்றொரு படமான 'தர்மதுரை' படத்தில் நடித்து வருகிறார்.


கபாலி பட வில்லன் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த இயக்குனர்!
[Friday 2016-01-01 22:00]

ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது. இதில் வில்லனாக நடிக்க ஜெட்லீயிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது.இதை தொடர்ந்து இன்று ஜெட்லீ சம்மதம் தெரிவித்து விட்டார் என்ற செய்தி காட்டுதீ போல் பரவியது. பலரும் இந்த செய்தியை ஷேர் செய்தனர்.ஆனால், ரஞ்சித்தே தன் டுவிட்டர் பக்கத்தில் இதை நம்ப வேண்டாம், தவறான செய்தி என்று கூறி விட்டார்.


இசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசு விருது!
[Friday 2016-01-01 09:00]

திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா இதுவரை ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார். மேலும் இசை ஆல்பங்களும் வெளியிட்டு உள்ளார். திரைப்பட துறையில் அவர் படைத்த சாதனைகளை பாராட்டி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அவருக்கு கேரள அரசின் விருது வழங்கப்படுகிறது.


தன்னை பற்றி தவறாக பேசியவர்கள் எல்லோருக்கும் பதிலடி கொடுப்பாரா சிம்பு..?
[Friday 2016-01-01 08:00]

சிம்புவின் பீப் சாங் பிரச்சனை தற்போது தான் அனைவரும் மறந்துள்ளனர். ஆனால், கண்டிப்பாக இதை சிம்பு மறக்கவே மாட்டார்.இந்நிலையில் நள்ளிரவு கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் ட்ரைலர் வந்தது.இதில் சிம்புவை எல்லோரும் அடிப்பது போல வர, பின் அவர் திருப்பி அடிக்கின்றார். இந்த ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.கண்டிப்பாக இப்படத்தின் மூலம் சிம்பு தன்னை பற்றி தவறாக பேசியவர்கள் எல்லோருக்கும் பதிலடி கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


தனது ரசிகர்களுக்கு பேஸ்புக் வாயிலாக புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர். ரஹ்மான்!
[Friday 2016-01-01 08:00]

2015-க்கு விடைகொடுத்த உலக மக்கள் 2016-ஐ மகிழ்வுடன் வரவேற்றுவரும் நிலையில் மகிழ்ச்சி, அன்பு, நல்ல ஆரோக்கியம் நிறைந்த ஆண்டாக இந்த புத்தாண்டு அமைந்திருக்க பிரார்த்தித்துக் கொள்ளும்படி ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். தனது அபிமானிகளுக்கு பேஸ்புக் வாயிலாக புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள ரஹ்மான், அமைதியின்மை, முரண்பாடு, குழப்பம் போன்றவை நீங்கி உயரிய சிந்தனை, உளத்தூய்மை மற்றும் ஆன்ம திருப்தியை நோக்கி மனிதம் உயரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.


தாங்கமுடியாத திடீர் வலியால் துடித்த நடிகை வித்யாபாலன் மருத்துவமனையில் அனுமதி!
[Thursday 2015-12-31 23:00]

நடிகை வித்யாபாலன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சில்க் ஸ்மிதா வாழ்க்கை சரித்திரமான


பெயர் மாற்றம் செய்யப்பட்ட மொட்ட சிவா கெட்ட சிவா !
[Thursday 2015-12-31 22:00]


பல மொழிகளில் ரீமேக்காக உள்ள ஓ காதல் கண்மணி: -ஹிந்தியில் கரன் ஜோஹர் தயாரிக்கிறார்
[Thursday 2015-12-31 18:00]

மணிரத்னமின் ஓ காதல் கண்மணி படம் பல மொழிகளில் ரீமேக்காக இருப்பதாக தகவல்கள் வந்திருந்தது.இந்நிலையில் இப்படம் ஹிந்தியில் ரீமேக்காக இருப்பதாகவும், படத்தை தர்மா புரொடக்ஷன் பேனரில் கரன் ஜோஹர் தயாரிக்க, ஷாத் அலி இயக்க இருக்கிறாராம்.அதோடு ஆஷிகி 2 என்ற படம் மூலம் அனைவரின் மனதை கவர்ந்த ஹிட் ஜோடிகளான ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்களாம்.இந்த தகவலை கரன் ஜோஹர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்திவுள்ளார்.


ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ள அஜித்!
[Thursday 2015-12-31 17:00]

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அஜித் தான். தனக்கு பின் பெரும் ரசிகர்கள் பலத்தை வைத்திருக்கும் இவர், ஆரம்ப காலத்தில் வெற்றிக்காக மிகவும் போராடினார்.ஒரே வருடத்தில் 5 படங்களில் நடித்து அந்த 5 படமும் தோல்வி அடைந்துள்ளது. பிறகு கொஞ்சம் நிதானமாக அவர் வருடத்திற்கு ஒரு படம் என முடிவு செய்து மங்காத்தா, ஆரம்பம், வீரம் என வெற்றி கொடுக்க, இந்த வருடம் என்னை அறிந்தால், வேதாளம் என டபூள் ஹிட் கொடுத்து விட்டார்.


எம்.ஜி.ஆர். வீட்டை ரசிகர்கள் பாதுகாக்க வேண்டும்: - சரோஜாதேவி கோரிக்கை
[Thursday 2015-12-31 12:00]

தமிழ் பட உலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர், சரோஜாதேவி. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர். இப்போது அவர் பெங்களூரில் வசித்து வருகிறார். சரோஜாதேவி பெங்களூரில் இருந்து போன் மூலம் நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது...


முழு நேர சமூக சேவகியாக மாறி மக்களுக்கு உதவுவேன் என்கிறார் நடிகை சமந்தா!
[Thursday 2015-12-31 10:00]

சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் முழு நேர சமூக சேவகியாக மாறி மக்களுக்கு உதவுவேன் என்று நடிகை சமந்தா கூறினார். சமந்தா கைவசம் தமிழ், தெலுங்கில் 6 படங்கள் உள்ளன. விஜய் ஜோடியாக


நடிகர் சங்கத்தின் கணக்கு விவரங்களை சரத் குமார் இன்னும் தரவில்லை: நடிகர் சங்கம் குற்றம் சாட்டு
[Thursday 2015-12-31 09:00]

நடிகர் சங்கத்தின் கணக்கு விவரங்களை சரத் குமார் இன்னும் தரவில்லை என்று நடிகர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத் குமார் ஊடகங்களுக்குத் தந்த பேட்டியைப் படித்தோம். அதுபற்றி மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் சில விளக்கங்களைத் தரவேண்டியுள்ளது. நடிகர் சங்க செயல்பாட்டில் இரண்டுவிதமான கணக்குகளைப் பராமரித்துத் தரவேண்டியது கட்டாயமாகிறது.


2015 ம் ஆண்டு வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த படங்கள்..!
[Thursday 2015-12-31 08:00]

தமிழ் சினிமா தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் வரவேற்பு பெற்று வருகின்றது. அதிலும் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு தொடர்ந்து இருந்து வருகின்றது.அந்த வகையில் இந்த வருடம் ரஜினி படம் வரவில்லை, கமல் படங்கள் பெரிதும் வசூல் செய்யவில்லை. ஆனால், விக்ரம், அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளது. அதன் விவரங்கள் இதோ... 1 ஐ - $9.1 M 2 வேதாளம் - $5+ M 3 என்னை அறிந்தால் - $4.55 M 4 மாஸ் - $3.82 M 5 புலி - $3.79 M இதில் வேதாளம் மலேசியாவில் மட்டும் ரூ 13 கோடி வரை வசூல் செய்தது சாதனையாக மலேசியா பாக்ஸ் ஆபிஸே அறிவித்திருந்தது.


2015ல் தமிழ் சினிமாவை கலக்கிய நாயகிகள்...!
[Thursday 2015-12-31 08:00]

தமிழ் சினிமா என்றாலே எப்போதும் நாயகர்கள் கையில் தான் உள்ளது. ஆனால், இந்த வருடம் ஹீரோயின்கள் சோலோவாக நடித்த சில படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் இந்த வருடத்தில் பிரபல நடிகைகளில் யார் அதிகப்படங்கள் நடித்தார்கள், அதில் ஹிட் படங்கள் எத்தனை என்பதன் விவரங்கள் இதோ..நயன்தாரா- நண்பேண்டா, மாசு, தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என இவர் 5 படங்களில் நடித்து முதலிடத்தில் உள்ளார். இதில் நண்பேண்டா சுமாராக ஓடினாலும், இதை தொடர்ந்து வந்த தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என தொடர் வெற்றிகளை கொடுத்துள்ளார்.


நடிகை பிரியங்கா சோப்ரா வெற்றிகரமான நடிகையாக வலம் வருவதற்கு நான்தான் காரணம்; - முலாயம் சிங் யாதவ்
[Thursday 2015-12-31 08:00]

தனது ஆசிர்வாதத்தால் மட்டுமே நடிகை பிரியங்கா சோப்ரா வெற்றிகரமான நடிகையாக வலம் வருவதாக சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் எடவாவில் ஆண்டுதோறும் சாய்பி என்ற திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். திரையுலகப் பிரபலங்கள் இதில் கலந்து கொள்வார்கள். இந்தாண்டு நடைபெற்ற விழாவில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கலந்து கொண்டார்.


பீப் பாடல் சர்ச்சை விவகாரத்தை சிம்பு சட்டப்படி சந்திப்பார்: - டி.ராஜேந்தர் தெரிவிப்பு
[Wednesday 2015-12-30 23:00]

பீப் பாடல் சர்ச்சை விவகாரத்தை சிம்பு சட்டப்படி சந்திப்பார் என்று அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இணையதளத்தில் பீப் பாடல் வெளியிட்டதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு நேற்று காலை நடிகர் சிம்புவின் தந்தையும், இயக்குனரு மான டி.ராஜேந்தர் வருகை தந்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பின் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது...


இந்த ஆண்டில் இலங்கை மக்கள் கூகுளில் அதிகம் தேடிய நடிகர் விஜய்!
[Wednesday 2015-12-30 08:00]

இந்த ஆண்டில் இலங்கை மக்கள் அதிகம் தேடிய நடிகர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் நடிகர் விஜய். ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் கூகுளில் அதிகம் தேடியவர்கள் பட்டியலை அந்நிறுவனம் வெளியிடும். அதே போல இந்த வருடமும் கூகுள் நிறுவனம் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகளவில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் நடிகை கிம் கர்தாஷியன் முதலிடம் பெற்று இருக்கிறார். உலகில் உள்ள அதிகமான நாடுகளில் கிம் கர்தாஷியனை அவரது ரசிகர்கள் போட்டி போட்டு தேடியுள்ளனர்.

Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா