Untitled Document
May 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
டாக்டர்களின் எதிரி - நிலக்கடலை சக்கரையை கொல்லும்
[Tuesday 2023-12-05 20:00]

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது.

பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.

இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள். கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.

போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

  
  
   Bookmark and Share Seithy.com



கட்டிப்புடி வைத்தியத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
[Sunday 2024-05-19 19:00]

பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட கூடியவர்கள் தான். மற்ற விலங்குகளுக்கு இல்லாதத ஒரு அற்புதமான உணர்வு தான் பாசம். அன்பு மற்றும் பாசம் என்பன மனிதர்களின் அடிப்படை தேவைகளுள் மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது.மனிதன் ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதற்கு உணவும், உடற்பயிற்சியும் மிகவும் மிக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பாசம் இன்றியமையாதது. மன நிம்மதி மற்றும் சந்தோஷத்திற்கு, காதலிப்பதும் ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிட்டது என்றால் மிகையாகாது.



கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Saturday 2024-05-18 16:00]

பொதுவாக வீட்டில் தானியங்கள் அதிகமாக சமைப்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தானியங்களில் இருக்கும் புரதம், பொட்டாசியம், மக்னீசியம், காபோவைதரேற்று உள்ளிட்ட சத்துக்கள் உடலிலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பெற்று தருகிறது. அந்த வகையில், சிறுதானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.



நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும் அத்திப்பழம்!
[Friday 2024-05-17 18:00]

நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் பழங்களில் கலோரிகள் குறைந்த பல பழங்கள் உள்ளன. இந்த வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பழம் தான் அத்திப்பழம். பார்ப்பதற்கு கண்ணுக்கு கவர்ச்சியாக இருந்தாலும் இந்த பழத்தில் கலோரிகள் குறைவாகவே இருக்கின்றன.



சருமப்பொலிவிற்கு தேங்காய் எண்ணெய் தீர்வு தருமா?
[Wednesday 2024-05-15 06:00]

நம் சருமம் கோடை காலத்தில் வறட்சியாக மாறும் போது அழகை இழந்து விடும் சமயத்தில் அதற்கு தேங்காண் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய ஊதாக்கதிர்கதிர்கள் சருமத்தை அதிகம் பாதிக்கின்றன. இதனால் புற்று நோய், தோல் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற சரும பாதிப்புகள் ஏற்படலாம்.



மணமணக்கும் கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு!
[Tuesday 2024-05-14 16:00]

கிராமத்து ஸ்டைலில் சுவையான மட்டன் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்று பெரும்பாலான நபர்கள் அசைவ பிரியர்களாகவே காணப்படுகின்றனர். அதிலும் மட்டன் என்றால் அலாதி பிரியம். ஆம் கிராமத்து ஸ்டைலில் மட்டன் குழம்பு வைத்தால் வீட்டில் அடிபுலியாகவே இருக்கும். தற்போது அந்த ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உணவு சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத விஷயங்கள்!
[Monday 2024-05-13 18:00]

உணவு சாப்பிட்ட பிறகு சிலர் ஓய்வெடுக்க விரும்புவார்கள். சிலர் புகைபிடிப்பதையோ அல்லது டீ குடிப்பதையோ விரும்புவார்கள். ஆனால் சாப்பிட்ட பிறகு செய்யும் சில செயல்கள் எப்படி உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?ஒவ்வொரு நபரும் உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்க வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளனர். ஆனால் மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.



புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கிறீங்களா? - இந்த ஆபத்து நிச்சயம்!
[Sunday 2024-05-12 16:00]

கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற இளைஞர்கள் புரதப்பவுடர் எடுத்துக்கொள்வதால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். புரோட்டீன் பவுடர்கள் முட்டை, பால் சார்ந்த பொருட்கள், சோயா பீன்ஸ், பட்டாணி, அரிசி ஆகியவற்றிலிருந்து புரோட்டீன்களை தனியாக பிரித்து அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.



கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
[Saturday 2024-05-11 18:00]

கறிவேப்பிலையின் மணமும் அதன் சுவையும் பலரையும் கவர்கிறது. இது பொதுவாக சாம்பார், தோசை மற்றும் தேங்காய் சட்னி போன்ற தென்னிந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும். இது ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது, ஏனெனில் இதில் பல மருத்துவ குணங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன, இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.



மூளை நரம்புகளை வலுவாக வைத்துக்கொள்ளும் உணவுகள்!
[Friday 2024-05-10 18:00]

நம்முடைய அன்றாட வேலைகளை சரியாக செய்வதற்கு மூளை சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம் என்பதால் அதற்குரிய சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மூளைக்கு சத்தான உணவுகளை கொடுக்கவில்லை என்றால் அது நமது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் வைட்டமின் B, B12, E, தாமிரம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாக சேர்க்கப்படுகின்றன.



வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்வது எப்படி?
[Thursday 2024-05-09 18:00]

சருமத்திற்கு தீங்கை விளைவிக்கும் சன்ஸ்கிரீமை கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வெயில் கூடிய பிரதேசங்களில் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது முக்கியமாகும். இதை பயன்படுத்தினால் சூரியக்கதிர்கள் சருமத்தை பாதிக்காமல் சருமம் அழகாக இருக்கும்.



ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் நல்லதா?
[Wednesday 2024-05-08 18:00]

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் நல்லதா? அல்லது தோல் இல்லாமல் சாப்பிட்டால் நல்லதா? என்ற கேள்விக்கான பதில் இதோ. பொதுவாக நாள் ஒன்றிற்கு ஒரு ஆப்பிள் எடுத்துக்கொண்டால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் ஆப்பிளில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குடல் மற்றும் இரப்பை பிரச்சினைக்கு சிறந்த தீர்வை அளிக்கும் இது, நல்ல குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.



செட்டிநாட்டு ஸ்டைலில் மணமணக்கும் முட்டை மசாலா குழம்பு!
[Tuesday 2024-05-07 18:00]

பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை முக்கிய இடம் வகிக்கின்றமை அனைவரும் அறிந்ததே. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினசரி ஒரு முட்டை சாப்பிட வேண்டியது அவசியம்.



எல்லா மதங்களிலும் விரதங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தெிரியுமா?
[Monday 2024-05-06 18:00]

மனிதன் தன் பசியை கட்டுப்படுத்ததுவது தான் விரதமாகும். இது ஒ்வொரு மதங்களிலும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது ஏன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். விரதம் இருப்பதால் அது பல நன்மைகளை தருகிறது. இதனால் சுய கட்டுப்பாடு மற்றும் தெய்வீகத்துடனான தொடர்பு போன்றவற்றை மேம்படுத்தும் ஒருவகையான ஆன்மீக ஒழுக்கத்தின் வடிவமாக விரதம் பார்க்கப்படுகிறது.



பெண்களே அழகாக இருக்க ஆன்மீக அழகுக்குறிப்புக்கள் இதோ!
[Sunday 2024-05-05 18:00]

பெண்கள் பொதுவாக அழகை விரும்புபவர்கள். உலகில் படைக்கப்பட்ட எல்லாப் பெண்களுமே மகாலட்சுமியின் சொரூபமானவர்கள். இவர்களில் சிலர் இயற்கயைான அழகை கொண்டிருப்பார்கள். சிலருக்கு அந்த அழகு கொஞ்சம் குறைவாக இருப்பதால் நீங்கள் தாழ்வு மனப்பான்மை அடைய கூடாது. உங்களிடம் இருக்கும் அழகை நீங்கள் மெருகூட்டிக்கொள்ள இந்த பதிவில் சில சிஷயங்ககளை குறிப்பாக பார்க்கலாம்.



பாகற்காயை எப்படி கசப்பில்லாமல் வறுவல் செய்யலாம் தெரியுமா?
[Saturday 2024-05-04 17:00]

பாகற்காய் மரக்கறி வகைகளில் மிகவும் முக்கியமான ஒரு மரக்கறியாகும். ஆனால் இதன் சுவை கசப்பென்பதால் இதை குழந்தைகளும் ஏன் பெரியவர்கள் சிலர் கூட உண்ண மாட்டார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பாகற்காயை உடலுக்கு சேர்க்கும் வகையில் கசப்பு சுவை வராமல் ஒரு ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம்.


Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா