Untitled Document
May 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
குழந்தைகள் அழுவதற்கு இத்தனை காரணங்கள் இருக்கா?
[Wednesday 2023-11-22 18:00]

பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுவது பசி தான். இது பெரும்பாலும் சரியாக இருந்தாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இது உண்மையாக இருக்காது. குழந்தைகள் அழுவதற்கு இதையும் தாண்டி உளவில் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.

பசிக்கு அடுத்தப்படியாக குழந்தைகள் பெற்றோரை அழைக்கவே அதிகமான சந்தர்ப்பங்களில் அழுகின்றன. குழந்தைகளால் தனக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல முடியாது அதற்கு ஏற்படும் எல்லா அசௌகரியங்களுக்கும் ஒரே துலங்கள் அழுகையாக தான் இருக்கும்.

இதனை சாதாரணமாக நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் குழந்தைகளின் உளவியல் பற்றிய அடிப்படை அம்சங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாகவும் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க குழந்தைகளின் உளவியல் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

பொதுவாக பசியை தவிர்த்து குழந்தைகள் அழுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பல நேரங்களில் குழந்தைகள் இறுக்கமான ஆடைகளை அணிந்திருப்பதால் அழ ஆரம்பிக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, அவர்கள் இதனை சங்கடமாகவும் உணர்கிறார்கள். எனவே, குழந்தைகளுக்கு எப்போதுமே தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது அவர்களை சௌகரியமாக வைத்திருக்க துணைப்புரியும்.

தாய் எதைச் சாப்பிட்டாலும் தாய் குழந்தைக்கு பால் கொடுப்பதன் மூலம் அது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.

மேலும் வறுத்த மற்றும் காரமான உணவுகளை தாய் அதிகமாக சாப்பிட்டால் அதன் தாக்கம் குழந்தைகளை பெரிதும் பாதிக்கும். இதனால் தான் குழந்தைகள் அழ தொடங்குகிறார்கள். உதாரணமாக, வயிற்று வலி அல்லது வாயு பிரச்சனை போன்றவை ஏற்படும்.

பல நேரங்களில், தெரிந்தோ தெரியாமலோ, தாய் குழந்தைக்கு அதிக பால் கொடுப்பதுண்டு. அதே சமயம், சில சமயங்களில் அவசர அவசரமாக குழந்தைகளுக்கு உணவளிப்பதும் அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும்.

இதன் காரணமாக குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் குழந்தைகள் அழுவதுண்டு. மேலும் சிறு குழந்தைகளின் எலும்புகள் மிகவும் மென்மையானதாக இருக்கும். குழந்தைகளை பெற்றோர்கள் கையாளும் போது ஏற்படும் கவனக்குறைவால் அவர்களின் எலும்புகள் பாதிப்படையும் அபாயம் உள்ளது.

ஒரு குழந்தையின் எலும்பு அதன் இடத்தில் இருந்து நழுவினால், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும். அதனால் குழந்தைகளை கையாளும் போது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஒரு குழந்தை தினமும் மாலையில் ஒரே நேரத்தில் அழுதால், அவர் கோலிக் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த நோயினால் குழந்தைகளுக்கு வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலியை அனுபவிக்கிறார்கள்.

அதனால் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக்கின்றார்கள் . பெரும்பாலும் குழந்தைகள் மூன்று மாதங்களுக்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயில், குழந்தைகள் பல மணி நேரம் அழுவார்கள். அதனை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

  
  
   Bookmark and Share Seithy.com



கட்டிப்புடி வைத்தியத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
[Sunday 2024-05-19 19:00]

பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட கூடியவர்கள் தான். மற்ற விலங்குகளுக்கு இல்லாதத ஒரு அற்புதமான உணர்வு தான் பாசம். அன்பு மற்றும் பாசம் என்பன மனிதர்களின் அடிப்படை தேவைகளுள் மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது.மனிதன் ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதற்கு உணவும், உடற்பயிற்சியும் மிகவும் மிக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பாசம் இன்றியமையாதது. மன நிம்மதி மற்றும் சந்தோஷத்திற்கு, காதலிப்பதும் ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிட்டது என்றால் மிகையாகாது.



கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Saturday 2024-05-18 16:00]

பொதுவாக வீட்டில் தானியங்கள் அதிகமாக சமைப்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தானியங்களில் இருக்கும் புரதம், பொட்டாசியம், மக்னீசியம், காபோவைதரேற்று உள்ளிட்ட சத்துக்கள் உடலிலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பெற்று தருகிறது. அந்த வகையில், சிறுதானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.



நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும் அத்திப்பழம்!
[Friday 2024-05-17 18:00]

நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் பழங்களில் கலோரிகள் குறைந்த பல பழங்கள் உள்ளன. இந்த வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பழம் தான் அத்திப்பழம். பார்ப்பதற்கு கண்ணுக்கு கவர்ச்சியாக இருந்தாலும் இந்த பழத்தில் கலோரிகள் குறைவாகவே இருக்கின்றன.



சருமப்பொலிவிற்கு தேங்காய் எண்ணெய் தீர்வு தருமா?
[Wednesday 2024-05-15 06:00]

நம் சருமம் கோடை காலத்தில் வறட்சியாக மாறும் போது அழகை இழந்து விடும் சமயத்தில் அதற்கு தேங்காண் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய ஊதாக்கதிர்கதிர்கள் சருமத்தை அதிகம் பாதிக்கின்றன. இதனால் புற்று நோய், தோல் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற சரும பாதிப்புகள் ஏற்படலாம்.



மணமணக்கும் கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு!
[Tuesday 2024-05-14 16:00]

கிராமத்து ஸ்டைலில் சுவையான மட்டன் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்று பெரும்பாலான நபர்கள் அசைவ பிரியர்களாகவே காணப்படுகின்றனர். அதிலும் மட்டன் என்றால் அலாதி பிரியம். ஆம் கிராமத்து ஸ்டைலில் மட்டன் குழம்பு வைத்தால் வீட்டில் அடிபுலியாகவே இருக்கும். தற்போது அந்த ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உணவு சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத விஷயங்கள்!
[Monday 2024-05-13 18:00]

உணவு சாப்பிட்ட பிறகு சிலர் ஓய்வெடுக்க விரும்புவார்கள். சிலர் புகைபிடிப்பதையோ அல்லது டீ குடிப்பதையோ விரும்புவார்கள். ஆனால் சாப்பிட்ட பிறகு செய்யும் சில செயல்கள் எப்படி உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?ஒவ்வொரு நபரும் உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்க வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளனர். ஆனால் மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.



புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கிறீங்களா? - இந்த ஆபத்து நிச்சயம்!
[Sunday 2024-05-12 16:00]

கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற இளைஞர்கள் புரதப்பவுடர் எடுத்துக்கொள்வதால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். புரோட்டீன் பவுடர்கள் முட்டை, பால் சார்ந்த பொருட்கள், சோயா பீன்ஸ், பட்டாணி, அரிசி ஆகியவற்றிலிருந்து புரோட்டீன்களை தனியாக பிரித்து அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.



கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
[Saturday 2024-05-11 18:00]

கறிவேப்பிலையின் மணமும் அதன் சுவையும் பலரையும் கவர்கிறது. இது பொதுவாக சாம்பார், தோசை மற்றும் தேங்காய் சட்னி போன்ற தென்னிந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும். இது ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது, ஏனெனில் இதில் பல மருத்துவ குணங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன, இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.



மூளை நரம்புகளை வலுவாக வைத்துக்கொள்ளும் உணவுகள்!
[Friday 2024-05-10 18:00]

நம்முடைய அன்றாட வேலைகளை சரியாக செய்வதற்கு மூளை சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம் என்பதால் அதற்குரிய சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மூளைக்கு சத்தான உணவுகளை கொடுக்கவில்லை என்றால் அது நமது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் வைட்டமின் B, B12, E, தாமிரம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாக சேர்க்கப்படுகின்றன.



வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயார் செய்வது எப்படி?
[Thursday 2024-05-09 18:00]

சருமத்திற்கு தீங்கை விளைவிக்கும் சன்ஸ்கிரீமை கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வெயில் கூடிய பிரதேசங்களில் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது முக்கியமாகும். இதை பயன்படுத்தினால் சூரியக்கதிர்கள் சருமத்தை பாதிக்காமல் சருமம் அழகாக இருக்கும்.



ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் நல்லதா?
[Wednesday 2024-05-08 18:00]

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் நல்லதா? அல்லது தோல் இல்லாமல் சாப்பிட்டால் நல்லதா? என்ற கேள்விக்கான பதில் இதோ. பொதுவாக நாள் ஒன்றிற்கு ஒரு ஆப்பிள் எடுத்துக்கொண்டால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறப்படுகின்றது. ஏனெனில் ஆப்பிளில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குடல் மற்றும் இரப்பை பிரச்சினைக்கு சிறந்த தீர்வை அளிக்கும் இது, நல்ல குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.



செட்டிநாட்டு ஸ்டைலில் மணமணக்கும் முட்டை மசாலா குழம்பு!
[Tuesday 2024-05-07 18:00]

பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை முக்கிய இடம் வகிக்கின்றமை அனைவரும் அறிந்ததே. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினசரி ஒரு முட்டை சாப்பிட வேண்டியது அவசியம்.



எல்லா மதங்களிலும் விரதங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தெிரியுமா?
[Monday 2024-05-06 18:00]

மனிதன் தன் பசியை கட்டுப்படுத்ததுவது தான் விரதமாகும். இது ஒ்வொரு மதங்களிலும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது ஏன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். விரதம் இருப்பதால் அது பல நன்மைகளை தருகிறது. இதனால் சுய கட்டுப்பாடு மற்றும் தெய்வீகத்துடனான தொடர்பு போன்றவற்றை மேம்படுத்தும் ஒருவகையான ஆன்மீக ஒழுக்கத்தின் வடிவமாக விரதம் பார்க்கப்படுகிறது.



பெண்களே அழகாக இருக்க ஆன்மீக அழகுக்குறிப்புக்கள் இதோ!
[Sunday 2024-05-05 18:00]

பெண்கள் பொதுவாக அழகை விரும்புபவர்கள். உலகில் படைக்கப்பட்ட எல்லாப் பெண்களுமே மகாலட்சுமியின் சொரூபமானவர்கள். இவர்களில் சிலர் இயற்கயைான அழகை கொண்டிருப்பார்கள். சிலருக்கு அந்த அழகு கொஞ்சம் குறைவாக இருப்பதால் நீங்கள் தாழ்வு மனப்பான்மை அடைய கூடாது. உங்களிடம் இருக்கும் அழகை நீங்கள் மெருகூட்டிக்கொள்ள இந்த பதிவில் சில சிஷயங்ககளை குறிப்பாக பார்க்கலாம்.



பாகற்காயை எப்படி கசப்பில்லாமல் வறுவல் செய்யலாம் தெரியுமா?
[Saturday 2024-05-04 17:00]

பாகற்காய் மரக்கறி வகைகளில் மிகவும் முக்கியமான ஒரு மரக்கறியாகும். ஆனால் இதன் சுவை கசப்பென்பதால் இதை குழந்தைகளும் ஏன் பெரியவர்கள் சிலர் கூட உண்ண மாட்டார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பாகற்காயை உடலுக்கு சேர்க்கும் வகையில் கசப்பு சுவை வராமல் ஒரு ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம்.


Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா