Untitled Document
May 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
எதை நோக்கிப் போகிறது ஈழத்து கலை கலாச்சாரம்? Top News
[Sunday 2023-11-12 13:00]

இயல், இசை, நாடகம், கலையிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஈழத்தமிழர்கள் சளைத்தவர்கள் அல்ல, பல கலை மேதைகள் நம் மண்ணில் இருந்திருக்கிறார்கள், ஏன் இந்திய திரைத்துறையிலும் கூட சாதித்து இருக்கிறார்கள். முதல் முதலில் கிறிஸ்தவ வேதாந்த நூலான Bible தமிழில் மொழிபெயர்த்தவர் இலங்கையை சேர்ந்த ஆறுமுகநாவலர். கலையரசு சொர்ணலிங்கம் ஐயா, A ரகுநாதன் ஐயா போன்ற பல பல கலைஞர்கள் எங்கள் கலைகளை, கலாச்சாரம் சீரழியாமல் வளரவேண்டும் என்று பல ஆண்டுகளாக பாடுபட்டனர். கலை உலகிலும் சரி, திரையுலகிலும் சரி பல தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் துறையை வளர்க்கப் படாத பாடு பட்டுள்ளனர்.

ஏறக்குறைய 50 ஆண்டுகள் எங்கள் விடுதலைப்போர் சூழல் காரணமாக கலைத்துறையிலோ, திரைத்துறையிலோ பெரும் செயல்பாடுகள் ஏதும் நடக்காத காரணத்தால் பெரும் வளர்ச்சியோ மாற்றமோ ஏற்டபடவில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் கலாச்சார சீரழிவுகள் ஏதும் நடக்கவில்லை என்பது நாம் மறுக்கமுடியாத உம்மை, அதற்கு காரணம் என்ன என்பதும் நாம் நன்கறிவோம். கடந்த சில வருடங்களாக நமது தாய் மண்ணில் பெண்கள் அழகு நிலையங்கள் அதிகரித்து வருவதோடு, அதைச்சார்ந்த நிகழ்வுகளும், நிகழ்ச்சிகளும், பாடல்காட்சி காணொளிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

அவை நமது கலாச்சாரம் கெடாமல் இருக்கும் வரை எவருக்கும் எந்தவித கவலையும் இல்லை, ஆனால் இச்செயல்பாடுகள் நமது கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில் உருவெடுக்கின்றது என்றால் அதைப்பற்றி நாம் சற்று கவனிக்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நம் மண்ணில் கலைத்துறை, திரைத்துறை வளரவேண்டும், சந்தேகமே இல்லை, திரைத்துறை பொருளாதாரரீதியில் வெற்றியடைந்து வளராமல் கலைத்துறையில் யாரும் பெரும் வெற்றியைப் பெற முடியாது, ஒரு துறை வளர்ச்சியடைந்து இருக்கிறது என்றால் அத்துறையால் கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பொருளாதார ஆதாயம் இருந்தால் மட்டுமே அதை வளர்ச்சி, வெற்றி என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.

முயற்சி என்பது வருட காலமாக வெற்றி இன்றி அதே இடத்தில் இருக்கிறதது என்றால் நாம் வெற்றிபெற, அதாவது நமது படைப்புக்களை உலகம் முழுதும் கொண்டு செல்ல என்ன செய்யவேண்டும் என்ற செயற்ப்பாட்டை முதலில் ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து செயல்படவேண்டும். வலுவான ஒரு துறையே இல்லாது, இந்திய பிரபலங்களைப் போல், நீங்கள் நாளைய பிரபலம் ஆகலாம் என்ற ஆசையைக்காட்டி நமது பெண்களின் ஆவலைத்தூண்டி, அவர்களை தவறாக உபயோகித்து, தவறான பாதையில் அழைத்துச்சென்று, பெண்களை துஷ்பிரயோகம் செய்து, சமுதாயத்தில் ஒரு சீரழிவை ஏற்படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடைபெறுமே ஆனால் இது ஒரு சீரழிந்த சமூகத்தை உருவாக்கிறது என்றாலே, அது ஒரு ஆரோக்கியமான மாற்றமாக இருக்க வாய்ப்பே இல்லை.

இந்நிகழ்வுகளால் யாருக்கு லாபம், என்ன லாபம்? எங்கு பார்த்தாலும் Beauty Parlour, Bridal shoot, பெண்களை அழகுபடுத்தி, ஆசை காட்டி தாங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது, அதே பெண்களை நட்சத்திரம் ஆக்குகிறோம் என்று ஆசை காட்டி வெளிநாட்டில் இருந்து வந்து அழகுராணி போட்டிகளை நடத்தி அதில் இருந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்வதோடு ஆள்கடத்தல் செய்து அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஒரு கும்பல் இறங்கி உள்ளது, மொத்தத்தில் பாதிக்கப்படுவது பெண்களைப்பெற்ற பெற்றோற்களும், பிரபலம் ஆகவேண்டும் என்ற மோகம் கொண்ட இளம் பெண்களும், நமது கலாச்சாரமும்தான்.

ஒரு அமைப்பு திருமணம் சம்மந்தமான ஒரு நிகழ்வு நடத்துகிறது, திருமணம் செய்யும் பெண்களை என்ன உடை அணியவேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது அல்லவா? ஆனால் அந்நிகழ்வில், மேடையில் வரும் பல பெண்கள் இந்திய கவர்ச்சிநடிகை அணியும் உடை போல் அணிந்து பவனிவருவது என்ன அவசியம்? அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணங்கள் நடந்தது போக அருந்ததியே, மாற்று மோதிரம் கலாச்சாரத்ததை கொச்சைப்படுத்தும் அளவிற்கு அழகு நிலையங்கள் வடிவமைக்கும் ஆடைகளை ஆங்கீகரித்து மேடையேற்றி நமது திருமண கலாச்சாரத்தையே கொச்சைப்படுத்தும் அளவிற்கு ஏன் கவர்ச்சி கலாச்சாரம் நமது மண்ணில் ஊடுருவுகிறது?

புலன்பெயர்ந்த நாட்டில் இருந்து ஒரு கூட்டம் தாய் மண்ணில் இறங்கி இருக்கிறது, இவர்கள் வசிக்கும் நாட்டில் ஏற்கனவே இவர்களைப்பற்றி பல சர்ச்சைகள் இருப்பது அந்நாட்டில் வாழும் சிலரின் பதிவுகளில் இருந்து தெரியவந்தது. இந்த கூட்டம் இலங்கையில் வசிக்கும் பெண்களுக்கு பண ஆசையையும், வெளிநாட்டுப்பயணம் என்ற ஆசையையும் மற்றும் நீங்கள் நாளைய பிரபலம் ஆகலாம் என்ற ஆசையையும் காட்டி பல அழகுராணி நிகழ்வுகளை நடாத்தி வருகிறது, பெண்களும் இவர்களின் உள்நோக்கம் அறியாமல் சமூகவலைத்தள பிரபலத்திற்கு ஆசைப்பட்டு, இவர்கள் இழுக்கும் திசையெல்லாம் சென்றுகொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமின்றி, வெற்றியைக் கொண்டாடும் பெயரில் ஒரு இரவுநேர கேளிக்கை விடுதிகளில் குடியும், போதைப்பொருட்களும், குத்தாட்டமும்.

ஒரு நிகழ்ச்சி நடாத்தும் போது அந்நிகழ்ச்சி பற்றிய செய்திகள் மக்களை சென்றடையவேண்டும் என்றால், பிரபலமாக வேண்டுமென்றால், நிகழ்ச்சி பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படவேண்டும் அல்லவா? இதில் வேடிக்கையும் அதிசயம் என்னவென்றால், இந்நிகழ்வுகளை நடாத்தும் நபர்களும், முன்னின்று செயல்பாடுகளை பொறுப்பெடுத்து நடாத்தும் நபர்களும் அவர்களின் முகநூலில் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும், அவர்கள் கலந்துகொள்ளும் வேறு நிகழ்வுகளைப்பற்றி உடனுக்குடன் பகிரும் இவர்கள், இவர்கள் நடாத்தும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பற்றி பதிவுகளைப் பகிர்வதில்லை, இச்செயல்பாடு நமது சந்தேகங்களை இன்னும் அதிகரிக்க வைக்கின்றது.

இதுபற்றி விசாரித்ததில், சில பொறுப்பாளர்கள் பெண்களை கூட்டிக்கொடுத்து பணம் சம்பாதிப்பதாகவும், இலங்கையில் சில முன்னணி தொலைக்காட்சிகள் இக்குழுக்கள் செயல்பாடுகள் கருதி, தமது தொலைக்காட்சியில் இவர்கள் நிகழ்ச்சிகளோ, செய்திகளோ வராமல் தடை செய்துள்ளதாக தகவல் கிடைத்தது. கலாச்சார உடையையொட்டி ஒரு நிகழ்ச்சி நடாத்துகிறோம் என்று கூறிவிட்டு ஒத்திகைகளில் அதே பெண்களை அரைகுறை உடையில் பார்த்து ரசிக்கும் கும்பல் எப்படி எமது கலாச்சாரத்தை பாதுகாக்கப்போகிறது? அவர்களுக்கு தேவை, ஒன்று பணம், இன்னொன்று பெண்களுடன் உல்லாசம், இதைத்தான் வளர்ச்சி என்பதா? இதுதான் கலையை வளர்ப்பதா? இதற்க்கெல்லாம் யாரை குறை கூறுவது.... அரசாங்கத்தையா? பிரபலம் , சமூக வளைதள மோகம் கொண்ட இளைய சமூகத்தையா? சுதந்திரம் என்ற பெயரில் தமது பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் பெற்றோர்களையா? பெண்ணாசையும், பொன்னாசையும் கொண்டு வெளிநாடுகளில் இருந்து தாய் நாடு வந்து சமூகத்தை ஆசை காட்டி வேஷம் போடும் துரோகிகளையா? தங்கள் வியாபாரத்துக்காக சமூக சீரழிவை நடாத்தும் வளர்ந்துவரும் அழகு நிலையங்களையா? இருப்பவர்கள் இருந்திருந்தால் இச்சீரழிவு நடந்திருக்குமா? விழித்தெழ வேண்டியது யார்? விழித்தெழு... விழித்தெழு பெண்ணே... விழித்தெழுங்கள் உறவுகளே...

  
  
   Bookmark and Share Seithy.com



“பேசுவோம் போரிடுவோம் ” நூல் வெயீட்டு விழா: யேர்மனி, டோட்முண்ட்! Top News
[Monday 2024-05-13 18:00]

11.05.2024 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மனியக் கிளையின் வெளியீட்டுப்பிரிவினால், தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புறுப்பினர் திரு. க.வே.பாலகுமாரன் அவர்களது கட்டுரைகள் தொகுக்கப்பட்ட “பேசுவோம் போரிடுவோம் “எனும் நூல் யேர்மனியின் டோட்முண்ட் (Dortmund) நகரில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக்கிளைப்பொறுப்பாளர் திரு. சிறீரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க, மாவீரர் நினைவுப்படத்திற்கு திருமதி.தீபா இரவிச்சந்திரன் அவர்களும் மே18 தமிழின அழிப்பு நினைவுப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு டோட்முண்ட் நகரக் கோட்டப்பொறுப்பாளர் திரு.செல்லையா பாலகிருஸ்ணன் அவர்களும் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரும் மலர் சுடர்வணக்கம் செலுத்தினார்கள். நூல் வெளியீட்டு விழாவின் அடுத்தநிகழ்வாக மங்கல விளக்குகள் ஏற்றிவைக்கப்பட்டது.



பிரித்தானியாவின் பழமை வாய்ந்த வோல்சிங்கம் தேவாலயத்தில் முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவு நாளிற்கான அறிவித்தம்! Top News
[Monday 2024-05-06 06:00]

பிரித்தானியாவின் பழமை வாய்ந்த வோல்சிங்கம் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற தமிழ் உற்சவத்திற்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்திருந்தனர். பிரித்தனியா தமிழர் பேரவையினரால் 15ம் ஆண்டு முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவு நாளிற்கான அறிவித்தலும் , சிறிலங்காவில் தொடரும் தமிழின அழிப்பினை புதிதாக உருவாக்கப்பட்ட ஐ நா கட்டமைப்பில் (O SLAP) சாட்சியங்களை பதிவிடும் உலகளாவிய வேலைத்திட்டம் பற்றிய விபரங்களும் வழங்கப்பட்டன.



போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன் வந்திருக்கிறார்! Top News
[Sunday 2024-05-05 18:00]

போகம்பர சிறைச்சாலையானது வரலாற்று கட்டிடக்கலையுடன் கூடிய ஹோட்டல் வளாகமாகும்… ஒரு முதலீட்டாளர் ஏற்கனவே முன் வந்துள்ளார்… அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு. போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன் வந்திருக்கிறார்.. இதன் பழமையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



கனடா நாடுகடந்த அரசவை தேர்தலில் அநீதிகள் இடம்பெற்றதாக குற்றச்ச்சாட்டு! Top News
[Thursday 2024-05-02 21:00]

இந்த புதிய சிக்கலுக்கு தீர்வுகளை எட்டுமா நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமைப்பணிமை ? தற்போதைய நான்காவது தவணைத்தேர்தல் முன்னெடுப்புகளில் அநீதிகள் இழைக்கப்பட்டு முன்னாள் அரசவை உறுப்பினர்கள் செயல்பாட்டாளர்கள் புதிய போட்டியாளர்கள் உள்ளிட்ட 14 பேர் முறையான காரணங்கள் இன்றி வேட்ப்புமனுக்கள் நீராகரிக்கப்பட்டது தொடர்பிலான பொதுமக்கள் மற்றும் ஊடக சந்திப்பு ஒன்று நேற்றுமாலை நடைபெற்றது.



எஹலேபொல மாளிகையின் உரிமையை உடனடியாக ஸ்ரீ தலதா மாளிகைக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன அறிவுறுத்தல்! Top News
[Sunday 2024-04-28 20:00]

வரலாற்று சிறப்புமிக்க எஹலெபொல மாளிகை இந்நாட்டின் முதல் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் ஆகும். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைக்கப்பட்ட எஹலேபொல மாளிகையை தலதா மாளிகையிடம் ஒப்படைத்ததன் பின்னர் தொல்பொருள் மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து இந்த மெழுகுசிலை அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க தேல பண்டார தெரிவித்தார்.



34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன்! Top News
[Monday 2024-04-22 21:00]

யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் இணைந்து பயணிக்கும் அனைவரையும் அழைத்துச் சிறப்போடு கொண்டாடியது.



நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஆராய விசேட குழு! Top News
[Monday 2024-04-08 22:00]

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நல்லூரில் தங்களின் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.



34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி! Top News
[Monday 2024-04-08 22:00]

தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது.



செங்கலடி இலுப்படிச்சேனையில் வர்த்தக நிலையங்களை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்! Top News
[Monday 2024-04-08 06:00]

செங்கலடி இலுப்படிச்சேனையில் உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தக நிலையங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமிய வர்த்தக நிலையங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.



ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு! Top News
[Sunday 2024-04-07 08:00]

விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகளின் விளைச்சலை அதிகரிப்பதற்காக விவசாயச் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்களையும், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கும் உபகரணங்களையம் ஆளுநர் வழங்கி வைத்தார்.



கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு! Top News
[Friday 2024-04-05 06:00]

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.



கனடிய தமிழர் பேரவையின் மகளிர் தின கொண்டாட்டங்கள்! Top News
[Thursday 2024-03-28 21:00]

கனடிய தமிழர் பேரவையின் மகளிர் தின கொண்டாட்டங்கள் மார்ச் 24, 2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வானது கனடாவில் உள்ள தமிழ் சமூகத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் பெண்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றுதல் கலாச்சார முக்கியத்துவத்துடன் ஆரம்பமான நிகழ்வு கனேடிய தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடுவதன் மூலம் நமது இரட்டை பாரம்பரியத்தையும் கலாச்சாரங்களின் இணக்கமான கலவையையும் பிரதிபலித்து தொடர்ந்தது.



யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024! Top News
[Friday 2024-03-22 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில் 16.03.24 சனி, 17.03.24 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சிய வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. பிரான்சு, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும்(அனுபவம்) வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.



இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு! Top News
[Wednesday 2024-03-13 06:00]

COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு நேற்று (10) ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாடு 25 வது முறையாக நடைபெற்றது. COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவை மார்ச் 10, 1999 இல் ஆரம்பிக்கப்பட்டது. "இன்றிலிருந்து முழு மனதுடன் தயாராவோம்" என்பதே இந்த ஆண்டு ரஜத ஜெயந்தியின் கருப்பொருளாக அமைந்துள்ளது.



கல்விக்கு முதலிடம், தமிழர் ஐக்கியத்துக்கு சிறப்பிடம், இரண்டிலும் கனடிய தமிழர், உலகத்தமிழருக்கு வழிகாட்டி - தெஹியோவிற்ற தமிழ் வித்தியாலய விஞ்ஞானகூட அங்குராப்பணம் தொடர்பில் மனோ கணேசன்! Top News
[Tuesday 2024-03-05 06:00]

இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி. அதேபோல் எங்கள் ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமை. இந்த இரண்டு கொள்கைகளையும் முன்னெடுத்து, கனடா தமிழர் பேரவை, அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆசியா ஊடாக ஆஸ்திரேலியா வரை உலகம் முழுக்க பரவி, விரவி வாழ்கின்ற தமிழருக்கு, முன்மாதிரியாக நின்று வழி காட்டி உள்ளது. இந்த இரு கொள்கைகளின் அடையாளமாகவே, இங்கே இன்று இந்த மலையக தமிழரினுள் வரும் பெருந்தோட்ட பிள்ளைகள் பயிலும், தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞானகூடம் கட்டப்பட மற்றும் உபகரணங்கள் வழங்க, கனடா மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மத்தியில் நிதி சேகரித்து, கனடா தமிழர் பேரவை சாதித்து காட்டியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.


Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா