Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
போக்குவரத்துத்துறை இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமனம்! Top News
[Friday 2023-09-29 21:00]

செப்டம்பர் 22ஆம் திகதி, வெள்ளிக்கிழமையன்று ஒன்ராறியா மாநில சட்டமன்றத்தில் செய்யப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றங்களின் அடிப்படையில் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் அமைச்சர் பிரப்மீத் சர்க்காரியா ஆகியோருடன் இணைந்து ஒன்ராறியோ வாழ் மக்களுக்காகப் பணியாற்றுவதற்கென போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதையிட்டு நான் பெருமை கொள்கிறேன். இத்தருணத்தில், என் தொகுதியாகிய ஸ்காபரோ - றூஜ் பார்க்கிலுள்ள மக்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் அவர்கள் வழங்கி வரும் ஆதரவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் தணிகாசலம் அவர்கள், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் திகதி நடைபெற்ற ஒன்ராறியோ மாநில சட்டமன்றத் தேர்தலில் ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019இல் இவர் போக்குவரத்து அமைச்சரின் உதவியாளராக நியமிக்கப்பட்டு, ஒன்ராறியோ அரசினால் அறிவிக்கப்பட்டு நடைபெற்றுவரும் ஸ்காபரோ நிலக்கீழ் தொடருந்து வழித்தட விரிவாக்க கட்டுமானப் பணிகளிலும் முன்னின்று செயற்பட்டு வருவதுடன், 2022ஆம் ஆண்டில் ஸ்காபரோ சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் அரசின் ஒரு மில்லியன் திட்டத்துக்கும் ஆதரவளித்திருந்தார்.

இதில் சென்டினரி மருத்துவமனையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவும், பேர்ச்மவுண்ட் மருத்துவமனைக் கட்டமைப்பும் அடங்கும். அத்துடன் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாகத்தில் அமைக்கப்பட்ட ஸ்காபுரோவின் முதல் மருத்துவப் பள்ளியான SAMIH இன் அமைவுக்கும் இவர் பெரும் பங்காற்றியிருந்தார். அதுபோன்று, தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் ஸ்காபரோ றூஜ் பார்க் பகுதியில் தமிழ் சமூக மையத்துக்கான நிதியுதவியையும் இவர் பெற்றுக்கொடுத்திருந்தார்.

இவை தவிர, ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தில் இவரால் கொண்டுவரப்பட்ட சட்டம் - 104 தமிழின அழிப்பு தொடர்பான கல்வி வாரம் உலகில் முதல் முதலாக தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளானார்கள் என்பதை அங்கீகரிக்கும் சட்டமாகக் கருதப்படுகிறது.

பதினைந்து மில்லியன் மக்கள் வாழும் ஒன்ராறியோ மாநிலத்தின் சட்டமன்றத்தில் தெரிவான முதல் தமிழ் அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் ஆகும். அத்துடன், இவர் தனது அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொள்ளும்போது திருக்குறள் மீது பதவியேற்பு உறுதிமொழியை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தெற்காசியாவிற்கு வெளியே திருக்குறள் மீது பதவியேற்ற முதலாவது அமைச்சர் இவராவார். மேலும் இவர் ஏனைய சட்டமன்றப் பதவிகளை வகித்த வேளையிலும் திருக்குறள் மீது பதவியேற்பு உறுதிமொழியை மேற்கொண்டிருந்தார் என்பதுடன், இவ்வாறு இவர் திருக்குறள் மீது பதவியேற்பு உறுதிமொழி மேற்கொள்வது இது மூன்றாவது முறையாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா