Untitled Document
May 8, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?
[Friday 2017-06-23 18:00]

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் ஒன்றினை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அறிந்திருப்போம். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகளோ அலாதி. சரி, இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா.

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம்.

சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும். சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.

முக்கியமாக தேனில் நெல்லிக்காயை ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தேனில் ஊறிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகத்தின் பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

நெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com



செட்டிநாட்டு ஸ்டைலில் மணமணக்கும் முட்டை மசாலா குழம்பு!
[Tuesday 2024-05-07 18:00]

பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை முக்கிய இடம் வகிக்கின்றமை அனைவரும் அறிந்ததே. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினசரி ஒரு முட்டை சாப்பிட வேண்டியது அவசியம்.



எல்லா மதங்களிலும் விரதங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தெிரியுமா?
[Monday 2024-05-06 18:00]

மனிதன் தன் பசியை கட்டுப்படுத்ததுவது தான் விரதமாகும். இது ஒ்வொரு மதங்களிலும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது ஏன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். விரதம் இருப்பதால் அது பல நன்மைகளை தருகிறது. இதனால் சுய கட்டுப்பாடு மற்றும் தெய்வீகத்துடனான தொடர்பு போன்றவற்றை மேம்படுத்தும் ஒருவகையான ஆன்மீக ஒழுக்கத்தின் வடிவமாக விரதம் பார்க்கப்படுகிறது.



பெண்களே அழகாக இருக்க ஆன்மீக அழகுக்குறிப்புக்கள் இதோ!
[Sunday 2024-05-05 18:00]

பெண்கள் பொதுவாக அழகை விரும்புபவர்கள். உலகில் படைக்கப்பட்ட எல்லாப் பெண்களுமே மகாலட்சுமியின் சொரூபமானவர்கள். இவர்களில் சிலர் இயற்கயைான அழகை கொண்டிருப்பார்கள். சிலருக்கு அந்த அழகு கொஞ்சம் குறைவாக இருப்பதால் நீங்கள் தாழ்வு மனப்பான்மை அடைய கூடாது. உங்களிடம் இருக்கும் அழகை நீங்கள் மெருகூட்டிக்கொள்ள இந்த பதிவில் சில சிஷயங்ககளை குறிப்பாக பார்க்கலாம்.



பாகற்காயை எப்படி கசப்பில்லாமல் வறுவல் செய்யலாம் தெரியுமா?
[Saturday 2024-05-04 17:00]

பாகற்காய் மரக்கறி வகைகளில் மிகவும் முக்கியமான ஒரு மரக்கறியாகும். ஆனால் இதன் சுவை கசப்பென்பதால் இதை குழந்தைகளும் ஏன் பெரியவர்கள் சிலர் கூட உண்ண மாட்டார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பாகற்காயை உடலுக்கு சேர்க்கும் வகையில் கசப்பு சுவை வராமல் ஒரு ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம்.



குழந்தைகள் ஏன் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் தெரியுமா?
[Friday 2024-05-03 18:00]

தற்காலத்தில் பொதுவாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருக்கின்றனர். இதனால் குழந்தைகளை சரியாக பராமரிக்க முடியாமலும் அவர்களுடன் நேரத்தை செலவிட முயாமலும் போகின்றது. முன்னைய காலாத்தில் பெரும்பாலும் மக்கள் கூட்டுக்குடும்பங்களாகவே வாழ்ந்தார்கள். இதனால் குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டியின் அன்பும் அரனைனைப்பு கிடைத்தது. ஆனால் தற்காலத்தில் அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது.



பார்த்தாலே பசி எடுக்கும் கிராமத்து ஸ்டைலில் விரால் மீன் குழம்பு!
[Thursday 2024-05-02 18:00]

பொதுவாகவே அனைவருக்கும் விதவிதமாக சமைத்து சாப்பிடுவது மிகவும் பிடித்த விடயமாக தான் இருக்கும்.அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லும் போதே நாவூரும். அசைவ உணவுகளை பொருத்த வரையில், மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றது. மீன்களை பொரித்து சாப்பிடுவதை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. மீன்குழம்பு என்றாலே கிராமத்து ஸ்டைல் தான் மிகவும் சுவையாக இருக்கும்.



ஒயின் குடித்தால் உண்டாகும் ஆபத்துக்கள் என்னவென்று தெரியுமா?
[Wednesday 2024-05-01 16:00]

ஆண் பெண் என இருபாலாரும் ஒயின் குடிப்பதால் உடலில் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்க முடியும். ஒயின் குடிப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கும் இது இதயத்தை பாதகாக்கும் வயதாகும் நெரத்தில் உண்டாகும் மூளை மந்தத்தையும் இல்லாமல் செய்கிறது.



சுட்டெரிக்கும் வெயிலுக்கு தர்பூசணி மில்க்‌ஷேக்!
[Tuesday 2024-04-30 18:00]

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமான தர்பூசணி மில்க்ஷேக் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடைகாலத்தில் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே இருப்பது இயல்பு. இதனால் கோடைகாலத்தில் அதிக பழ வகைகள் சாப்பிடவும், நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.



வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் பயன் என்ன?
[Monday 2024-04-29 18:00]

தினமும் காலையில் வெறு வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். நெய்யில் பல வகையான நன்மைகள் உள்ளது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சாப்பிடும் பொழுது அது நம்முடைய செரிமானத்தை தூண்டச்சயெ்கிறது.



நீரிழிவு நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா?
[Sunday 2024-04-28 18:00]

நீரிழிவு நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நீரிழிவு நோய் இன்று பெரும்பாலான நபர்களை தாக்கி பல சிக்கல்களை கொண்டு வருகின்றது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுவிட்டால், அவர்களின் உணவுமுறை முற்றிலும் மாறிவிடும்.



உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் சுரைக்காய் கூட்டு!
[Saturday 2024-04-27 18:00]

பொதுவாக அனைவருக்குமே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நமது மனமும் உடலும் பெரும்பாலான சமயங்களில் அதற்கு ஒத்துப்போவதில்லை. சரியான நேரத்தில் உடல் எடையை குறைக்கவிட்டால், அது பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.



ஆடையே நனையும் அளவுக்கு வியர்க்குதா? - இந்த 4 வழிகள் தீர்வு கொடுக்கும்!
[Friday 2024-04-26 18:00]

பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதும் வியர்வை அதிகமாக வெளியேறுவதும் இயல்பான விடயமாகும். ஆனால் இது வேலைக்கு செல்லும் நபர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும். சில சமயங்களில் ஆடை முழுமையாக நனைந்துவிடும் அளவுக்கு வியர்வை வெளியேறும்.இந்த பிரச்சினைக்கு எவ்வாறு எளிமையாக தீர்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.



கோடை காலத்தில் தயிர் சாப்பிடக்கூடாதா? - பலரும் அறிந்திடாத உண்மை!
[Thursday 2024-04-25 18:00]

கால்சியம் சத்து அதிகம் கொண்ட தயிரை தினமும் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலத்தில் நமது உடம்பை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள தயிர் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.



தினமும் சக்கரை சாப்பிடுவதால் உடலில் நடக்கும் மாற்றம்!
[Wednesday 2024-04-24 18:00]

நாம் நமது வாழ்க்கையில் அறுசுவைள் சாப்பிட்டாலும் சக்கரையை கொஞ்சம் அதிகமாக தான் உண்கிறோம். இந்த சக்கரை உண்பது சரியா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். சக்கரை அதிகமாக உண்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. இதற்கான காரணம் சக்கரையில் அதிகளவு கொழுப்பு இல்லாமல் இருந்தாலும் இதை உண்ணும் போது வேறு வழியில் நாம் நிறைய கலோரியான உணவுகளை உண்கிறோம்.



இட்லி, தோசை மாவு அரைக்கும் போது தயிர் சேர்த்து அரைத்துள்ளீர்களா?
[Tuesday 2024-04-23 18:00]

இட்லி, தோசை நாம் பொதுவாக காலையில் இலகுவாக செய்யும் ஒரு உணவு வகையாகும். இட்லி, தோசை மாவு அரைக்கும் போது அதில் நாம் ஏகப்பட்ட தானியங்களை சேர்க்கின்றோம். இதில் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு என்பதால் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.


NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா