Untitled Document
May 20, 2024 [GMT]
போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச மேற்பார்வையை கோருமாறு பிரித்தானிய நாடாளுமன்றில் பிரேரணை!
[Friday 2024-05-10 04:00]

இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளின்போது சர்வதேச சட்ட நியமங்களை முறையாகப் பேணுமாறும், பக்கச்சார்பற்ற நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் வகையில் சர்வதேச மேற்பார்வையைக் கோருமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளின்போது சர்வதேச சட்ட நியமங்களை முறையாகப் பேணுமாறும், பக்கச்சார்பற்ற நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் வகையில் சர்வதேச மேற்பார்வையைக் கோருமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

  

தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜோர்ஜ் கலோவேயினால் பிரிட்டன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இத்தீர்மானத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இது குறிப்பாகத் தமிழ்மக்களை வெகுவாகப் பாதித்த பெரும் எண்ணிக்கையான உயிரிழப்புக்களுக்கும், இடப்பெயர்வுக்கும் வழிகோலிய யுத்த நிறைவை நினைவுறுத்துகின்றது.

இந்த யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உயிர்களையும் நினைவுகூர்ந்து, இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் துன்பங்களைப் புரிந்துகொள்ளும் அதேவேளை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளின்போது சர்வதேச சட்ட நியமங்களை முறையாகப் பேணுமாறும், பக்கச்சார்பற்ற நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் வகையில் சர்வதேச மேற்பார்வையைக் கோருமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்கும், நல்லிணக்க முயற்சிகளுக்கும் சர்வதேச சமூகம் தொடர்ந்து ஆதரவளிப்பதை ஊக்குவிப்பதுடன், நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்பல் மற்றும் அனைத்து இனக்குழுக்களுக்குமான கௌரவத்தை உறுதிப்படுத்தல் ஆகியவற்றில் பிரிட்டனின் வகிபாகத்தை மீளவலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று இலங்கையில் தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் மனித உரிமைகள் சார் சவால்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், கலந்துரையாடல்களைக் கட்டியெழுப்புவதிலும் முன்னின்று செயற்படும் பிரிட்டன்வாழ் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் பங்களிப்பை வரவேற்கின்றோம்.

இந்நிலையில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான செயற்திட்டங்களுக்கும், சர்வதேச மீள் கட்டியெழுப்பல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் பிரிட்டன் அரசாங்கம் வழங்கிவரும் ஆதரவை மேலும் விரிவுபடுத்தவேண்டும் எனப் பரிந்துரைக்கின்றோம்.

அத்தோடு இலங்கை வாழ் தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய நிலைவரத்தை மதிப்பீடு செய்வதற்கும், மனித உரிமைகள் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான உலகளாவிய முயற்சிகளில் பிரிட்டனின் வகிபாகத்தை ஆராய்வதற்கும் இவ்வவையில் ஒரு விவாதம் முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கோருகின்றோம் என அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



யுவதியின் உயிரைக் குடித்த இராணுவ வாகனம்! - பிறந்த நாளில் சோகம். Top News
[Monday 2024-05-20 16:00]

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே இன்று நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.



சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு பெற்று டென்மார்க் சென்ற பெண் யாழ்ப்பாணம் திரும்பிய போது கைது!
[Monday 2024-05-20 16:00]

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.



ரைசியின் மரணம் - ரணில் அதிர்ச்சி!
[Monday 2024-05-20 16:00]

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பிற மூத்த ஈரானிய அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



கஞ்சி பரிமாறியதற்கான கைதானவர்கள் இன்று விடுதலை!
[Monday 2024-05-20 16:00]

சம்பூர் - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதாக கைது செய்யப்பட்ட நால்வரும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.



ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்கர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!
[Monday 2024-05-20 16:00]

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாயா, அமரபுர மகா சங்க சபை பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



விஜயதாச தலைவராகச் செயற்படத் தடை!
[Monday 2024-05-20 16:00]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு விஜயதாச ராஜபக்ஷவுக்கும், பொதுச் செயலாளராக செயற்படுவதற்கு கீர்த்தி உடவத்தவுக்கும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.



ஈரான் ஜனாதிபதியின் மரணம் - மஹிந்த, நாமல் இரங்கல்!
[Monday 2024-05-20 16:00]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு ஈரான் நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது நாட்டிற்கான சேவை மற்றும் அர்ப்பணிப்பு மரபு என்றென்றும் நினைவுகூரப்படட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.



டயானாவைக் காணவில்லை! - நீதிமன்றத்தில் கைவிரித்த சிஐடி.
[Monday 2024-05-20 16:00]

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.



வடக்கில் 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குகிறார் ஜனாதிபதி!
[Monday 2024-05-20 16:00]

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார்.



காலநிலை மோசம் - 10,299 பேர் பாதிப்பு!
[Monday 2024-05-20 16:00]

காலநிலை காரணமாக 3,518 குடும்பங்களைச் சேர்ந்த 10,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் துசித வைத்தியரத்ன தெரிவித்தார்.



பொதுவேட்பாளர் விவகாரத்தில் தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம் - முடிவின்றி முடிந்தது செயற்குழு கூட்டம்!
[Monday 2024-05-20 05:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக கூடிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், எவ்விதமான தீர்மானங்களும் எடுக்காமலேயே நிறைவுக்கு வந்துள்ளது.



ஆட்சிக்கு வந்து 48 மணித்தியாலத்துக்குள் விசேட செயலணி!- இராணுவத்தினருக்கு சஜித் வாக்குறுதி.
[Monday 2024-05-20 05:00]

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றித் தந்தது போல திருடர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற இராணுவ வீரர்கள் எம்மோடு ஒன்றிணைந்துகொள்ள வேண்டும்.நாட்டின் அரசியல் அதிகாரம் சரியான தலைமைத்துவத்தை வழங்கியிருந்தால் நாடு வளமான நாடாக மாறியிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு தமிழினத்துக்கு பெரும் பலத்தைக் கொடுக்கும்! - என்கிறது முன்னணி.
[Monday 2024-05-20 05:00]

இந்த ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பினூடாக அரசியல் ரீதியாகவும் இராஜதந்திரரீதியாகவும் ஏற்படுத்தப்படப்போகும் அழுத்தமானது தமிழினத்துக்கே மிகப்பெரிய பலத்தை வழங்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.



அனுர - சஜித் மோதலுக்கு நாள் குறிப்பு!
[Monday 2024-05-20 05:00]

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையில் இடம்பெற இருக்கும் விவாதத்துக்காக திகதி வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.



ஜூன் 14 ஆம் திகதிக்குள் பாராளுமன்றம் கலைப்பு!
[Monday 2024-05-20 05:00]

முக்கியமான சட்டங்களை இயற்றிக் கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதிக்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடபோவதில்லை. அவருக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கவும் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.



தேர்தலை மொட்டு கட்சியே தீர்மானிக்கும் என்றால் தேர்தல் ஆணைக்குழு எதற்கு?
[Monday 2024-05-20 05:00]

ஜனாதிபதி தேர்தல்,பொதுத்தேர்தல் என்ற வேறுபாடில்லை. எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார்.வெற்றியோ,தோல்வியோ அதனை நாங்கள் எதிர்கொள்வோம்.எந்த தேர்தல் முதலில் நடத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுன தீர்மானிக்குமாயின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதற்கு. பாராளுமன்றத்தைக் கலைப்பது ஜனாதிபதி சாதகமாக அமையாது எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.



கனேடியப் பிரதமரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிப்பு!
[Monday 2024-05-20 05:00]

தமிழ் இன அழிப்பு நாளை முன்னிட்டு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை இலங்கை நிராகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.



புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!
[Monday 2024-05-20 05:00]

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன



தமிழரசுக் கட்சி வழக்கை சுமுக தீர்க்க முடிவு!
[Monday 2024-05-20 05:00]

தமிழரசுக் கட்சி தொடர்பில் சுமூகமான முடிவுகள் எட்டப்படவேண்டும் என்ற அடிப்படையில் எமது செயற்பாடுகள் அமைந்துள்ளதாக சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.



துணுக்காய் விபத்தில் 4 பேர் காயம்!
[Monday 2024-05-20 05:00]

முல்லைத்தீவு - துணுக்காய் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். துணுக்காயிலிருந்து மல்லாவி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், மாங்குளத்திலிருந்து துணுக்காய் நோக்கி சென்றுகொண்டிருந்த காரும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.


Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா