Untitled Document
May 20, 2024 [GMT]
உக்ரைன்- ரஷ்ய போர்முனைக்கு கூலிப்படைகளாக செல்லாதீர்கள்! - சவேந்திர சில்வா கோரிக்கை.
[Wednesday 2024-05-08 19:00]


வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு இலங்கை படை வீரர்களிடம் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு இலங்கை படை வீரர்களிடம் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

  

உக்ரைன் - ரஷ்யப் போரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் கூலிப் படைகளாக இணைந்து செயற்படுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், இந்தப் போரில் இலங்கையர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சம்பளம், குடியுரிமை, உள்ளிட்ட போலி வாக்குறுதிகளால் அழைத்துச் செல்லப்படும் இவர்கள் அங்கு கூலிப்படையாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, சவேந்திர சில்வா இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஒரு காலத்தில் எம் தேசத்தின் பெருமையாக இருந்த இந்த படைவீரர்கள் இன்று போலியான வாக்குறுதிகளுக்கு அடிபணிந்துள்ளனர். போர் வீரர்கள் மற்றும் தேசபக்தர்கள் என்று வரையறுக்கும் விழுமியங்களையும் கைவிட்டுள்ளனர். இலங்கையின் ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் என்ற வகையில், கடமை, மரியாதை மற்றும் தாய்நாட்டிற்கான விசுவாச உணர்வு ஆகியவற்றால் நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம்.

ஆனால் இன்று பணம் மற்றும் நிலையற்ற பெருமைக்காக தங்களின் விசுவாசத்தை கைவிடும்படி தூண்டப்படுகின்றனர். கூலிப்படை என்பது உன்னதமாக போர் நடவடிக்கை அல்ல. மாறாக இது ஆபத்தான பாதையாகும்.

இந்தப் பாதையில் நடப்பவர்கள் மூலம் எமது மதிப்பிற்குரிய இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அபாயம் உள்ளது.

உலகின் மிகவும் பயங்கரவாத அமைப்பை தோற்கடித்த இராணுவத்தின் உறுப்பினர்களாக, நாம் எமது தொழிலின் மரியாதையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



பொதுவேட்பாளர் விவகாரத்தில் தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம் - முடிவின்றி முடிந்தது செயற்குழு கூட்டம்!
[Monday 2024-05-20 05:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக கூடிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், எவ்விதமான தீர்மானங்களும் எடுக்காமலேயே நிறைவுக்கு வந்துள்ளது.



ஆட்சிக்கு வந்து 48 மணித்தியாலத்துக்குள் விசேட செயலணி!- இராணுவத்தினருக்கு சஜித் வாக்குறுதி.
[Monday 2024-05-20 05:00]

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றித் தந்தது போல திருடர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற இராணுவ வீரர்கள் எம்மோடு ஒன்றிணைந்துகொள்ள வேண்டும்.நாட்டின் அரசியல் அதிகாரம் சரியான தலைமைத்துவத்தை வழங்கியிருந்தால் நாடு வளமான நாடாக மாறியிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு தமிழினத்துக்கு பெரும் பலத்தைக் கொடுக்கும்! - என்கிறது முன்னணி.
[Monday 2024-05-20 05:00]

இந்த ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பினூடாக அரசியல் ரீதியாகவும் இராஜதந்திரரீதியாகவும் ஏற்படுத்தப்படப்போகும் அழுத்தமானது தமிழினத்துக்கே மிகப்பெரிய பலத்தை வழங்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.



அனுர - சஜித் மோதலுக்கு நாள் குறிப்பு!
[Monday 2024-05-20 05:00]

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையில் இடம்பெற இருக்கும் விவாதத்துக்காக திகதி வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.



ஜூன் 14 ஆம் திகதிக்குள் பாராளுமன்றம் கலைப்பு!
[Monday 2024-05-20 05:00]

முக்கியமான சட்டங்களை இயற்றிக் கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதிக்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடபோவதில்லை. அவருக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கவும் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.



தேர்தலை மொட்டு கட்சியே தீர்மானிக்கும் என்றால் தேர்தல் ஆணைக்குழு எதற்கு?
[Monday 2024-05-20 05:00]

ஜனாதிபதி தேர்தல்,பொதுத்தேர்தல் என்ற வேறுபாடில்லை. எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார்.வெற்றியோ,தோல்வியோ அதனை நாங்கள் எதிர்கொள்வோம்.எந்த தேர்தல் முதலில் நடத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுன தீர்மானிக்குமாயின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதற்கு. பாராளுமன்றத்தைக் கலைப்பது ஜனாதிபதி சாதகமாக அமையாது எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.



கனேடியப் பிரதமரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிப்பு!
[Monday 2024-05-20 05:00]

தமிழ் இன அழிப்பு நாளை முன்னிட்டு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை இலங்கை நிராகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.



புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!
[Monday 2024-05-20 05:00]

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன



தமிழரசுக் கட்சி வழக்கை சுமுக தீர்க்க முடிவு!
[Monday 2024-05-20 05:00]

தமிழரசுக் கட்சி தொடர்பில் சுமூகமான முடிவுகள் எட்டப்படவேண்டும் என்ற அடிப்படையில் எமது செயற்பாடுகள் அமைந்துள்ளதாக சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.



துணுக்காய் விபத்தில் 4 பேர் காயம்!
[Monday 2024-05-20 05:00]

முல்லைத்தீவு - துணுக்காய் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். துணுக்காயிலிருந்து மல்லாவி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், மாங்குளத்திலிருந்து துணுக்காய் நோக்கி சென்றுகொண்டிருந்த காரும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.



குற்றமிழைத்தவர்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை!
[Sunday 2024-05-19 17:00]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று 15 வருடங்களாகின்ற நிலையில் தமிழ் மக்கள் 2009 இனப்படுகொலைகளை நினைவுகூரும்போது அவர்களிற்கு தங்கள் ஆதரவை வெளியிடுவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



மாவை தலைமையில் தமிழரசின் மத்திய குழு கூடியது!
[Sunday 2024-05-19 17:00]

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.



நீர்மூழ்கிகளை தடுக்க அமெரிக்காவிடம் ஒத்துழைப்புக் கோரியது இலங்கை!
[Sunday 2024-05-19 17:00]

அனுமதியின்றி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது.



கூலிப்படைகளாகச் சென்றவர்கள் குறித்து 400 முறைப்பாடுகள்!
[Sunday 2024-05-19 17:00]

ரஷ்யா-உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக கூலிப்படை நிறுவனங்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.



ஒக்டோபர் 5 அல்லது 12இல் ஜனாதிபதி தேர்தல்!
[Sunday 2024-05-19 17:00]

ஜனாதிபதி தேர்தலை ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆலோசனைக்குப் பிறகே ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.



மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வை குழப்பிய பொலிசாருக்கு கண்டனம்!
[Sunday 2024-05-19 17:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கு செய்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்திய பொலிஸாரின் செயலை ஒரு சிவில் சமூகமாக வன்மையாகக் கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி. லவகுமார் தெரிவித்துள்ளார்.



காங்கேசனுக்கான கப்பல் சேவை காலவரையின்றி ஒத்திவைப்பு!
[Sunday 2024-05-19 17:00]

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கையர்களுடன் துணை நிற்கிறது அமெரிக்கா!
[Sunday 2024-05-19 17:00]

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒன்றிணைந்த எதிர்காலத்திற்கான மீளெழுச்சி மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இலங்கையர்களுடனும் அமெரிக்கா துணை நிற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.



எலோன் மஸ்க்கைச் சந்தித்தார் ஜனாதிபதி!
[Sunday 2024-05-19 17:00]

இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் மன்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலதிபர் எலோன் மஸ்க்கைச் சந்தித்து Starlink ஐ இலங்கையில் அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.



ஈரானியத் தூதுவரைத் தாக்கிய கொழும்பு வர்த்தகர் கைது!
[Sunday 2024-05-19 17:00]

ஈரானிய தூதுவர் ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித் தெரு பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய தூதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா