Untitled Document
May 17, 2024 [GMT]
ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி களமிறங்குவது கேலிக்கூத்து!
[Tuesday 2024-04-30 05:00]


ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி வேட்பாளரை களமிறக்குவது கேலிக்கூத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் திங்கட்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி வேட்பாளரை களமிறக்குவது கேலிக்கூத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  

எனது அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஒருசில ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன. அதேபோல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு நான் முயற்சிப்பதாகவும், சுதந்திர கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அரசியல் களத்தில் அடிப்படையற்ற கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் 40 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த சுதந்திர கட்சி அரசியலில் பூச்சியமளவுக்கு பலவீனமடைந்தது. நாட்டை இல்லாதொழித்த மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சியை ஆறு பகுதிகளாக பிளவுப்படுத்தியுள்ளார். ஆகவே கட்சியை ஆரம்பத்தில் இருந்து சீரமைக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் பலவீனமடைந்துள்ளது.கட்சியின் 90 சதவீதமான உறுப்பினர்கள் பிறிதொரு பகுதியில் உள்ளார்கள். 10 சதவீதமான தரப்பினர் மாத்திரமே கட்சிக்குள் உள்ளார்கள். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய நிலைமையை மக்கள் விடுதலை முன்னணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து அரசியலில் இருந்து விலகினேன். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை நான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கினேன். ஆனால் அவர் என்னை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கினார். ஆண்மகன் ஒருவன் கூட எதிர்கொள்ள முடியாத இன்னல்களை எதிர்கொண்டேன்.

2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை எதிர்பார்த்தார்கள். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரிடம் குறிப்பிட்டேன். எனது கருத்துக்கு மதிப்பளிக்காமல் என்னை கட்சியின் பதவியில் இருந்து மைத்திரி நீக்கினார்.இறுதியில் நான் குறிப்பிட்டது நிறைவேறியது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது. நெருக்கடியான சூழலில் கட்சியை பொறுப்பேற்குமாறு பலர் எனக்கு அழைப்பு விடுத்தார்கள். நான் அதனை ஏற்கவில்லை. இருப்பினும் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் அழைப்புக்கு அமைய கட்சியின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னிலையாகியுள்ளேன்.

சுதந்திர கட்சியின் இன்றைய அவல நிலைக்கு மைத்திரிபால சிறிசேனவும்,மஹிந்த ராஜபக்ஷவும் பொறுப்புக் கூற வேண்டும். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் வேட்பாளரை களமிறக்குவது ஏனெனில் கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரை களமிறக்குவது கேலிக்கூத்தானது.

சுதந்திர கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க எனது நண்பர் இருப்பினும் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஊழல்வாதிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் சுய கொள்கைகளையும் மறந்து விட்டு 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போராட்டம் ஒன்று தோற்றம் பெற்றது என்பதை மறந்து விட்டு செயற்படுகிறார்.

கட்சியின் யாப்புக்கு அமைய சுதந்திர கட்சியின் பதவி நிலைகளில் தற்காலிக மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெகுவிரைவில் நிலையான மாற்றம் ஏற்படுத்தப்படும்.கட்சியின் தலைவர் பதவியை நான் பெற்றுக் கொள்ள போவதில்லை.தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மாத்திரம் முன்னிலையாகியுள்ளேன் .

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் கட்சியின் பதில் தவிசாளராக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமை சுதந்திர கட்சியின் யாப்புக்கு முற்றிலும் விரோதமானது.

பல அரசியல் கட்சிகளில் உறுப்பினராக பதவி வகித்த விஜயதாஸ ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நோக்கத்தில் சுதந்திர கட்சிக்கு வருகை தந்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன வீதியில் செல்பவர்களை அழைத்து வந்து அவர்களை நிறைவேற்று சபையில் அமர செய்து தவறான தீர்மானங்களை எடுத்துள்ளார். நாட்டின் நீதியமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அரசியல் கட்சிகளின் யாப்பு மற்றும் பொது சட்டம் பற்றி கூற வேண்டிய தேவை இல்லை.

சுதந்திர கட்சியை சீரழித்த மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்துள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தனது நற்பெயரை இல்லாதொழித்துக் கொள்ள கூடாது என்பதை மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதற்காக கைது செய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!
[Friday 2024-05-17 16:00]

திருகோணமலை - மூதூர் - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் மூதூர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டுவதற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும்!
[Friday 2024-05-17 16:00]

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் அதற்கு காரணமானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



எலிசபெத் வேண்டாம்! - நிராகரியுங்கள் என்கிறார் கம்மன்பில.
[Friday 2024-05-17 16:00]

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது டெலோ!
[Friday 2024-05-17 16:00]

தேசியத்தின்பால் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் டெலோ ஈடுபடுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



பாதிக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகளை சந்தித்த அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 16:00]

முள்ளிவாய்க்கால் போரின் 15 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின், முன்னாள் போராளிகளின் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டக் கைதிகளின் குடும்பங்களை இன்று சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.



மூன்று மீனவர்களுடன் சம்பில்துறையில் கரையொதுங்கியது இந்தியப் படகு!
[Friday 2024-05-17 16:00]

தமிழகம்- மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர் படகு ஒன்று வியாழக்கிழமை மாலை எரிபொருள் தீர்ந்ததனால் யாழ்ப்பாணம் - சம்பில்துறையில் கரையொதுங்கியது. பெருமாள் வாஞ்சிநாதன், ராஜேந்திரன் மகேஷ், இளங்கோவன் ரஞ்சித்குமார் ஆகிய மீனவர்கள் படகுடன் கரையொதுங்கினர். குறித்த மீனவர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



நினைவேந்தல்களை தடுக்க வேண்டாம்! - என்கிறார் மைத்திரி
[Friday 2024-05-17 16:00]

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று அரசிடம் கோரியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.



நாடு நல்ல நிலையை அடைந்த பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு!
[Friday 2024-05-17 16:00]

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.



சஜித்துடன் இணைந்தார் முன்னாள் இராணுவத் தளபதி!
[Friday 2024-05-17 16:00]

முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.



தாவடியில் இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்!
[Friday 2024-05-17 16:00]

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு - அமெரிக்க காங்கிரசில் பிரேரணை!
[Friday 2024-05-17 05:00]

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்பதை அமெரிக்க காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் ஈழத்தமிழர்களிற்கான சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சிக்கு தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம்! Top News
[Friday 2024-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியை வழங்குவதற்கு மூதூர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடை உத்தரவை வியாழக்கிழமை நீக்கியுள்ளது என இவ் வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சுகாஸ் கூறியுள்ளார் .



கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்க முடிவு!
[Friday 2024-05-17 05:00]

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.



நினைவேந்தல் தொடர்பில் பொது கொள்கை இல்லையா? - ரணிலின் மனோ கேள்வி.
[Friday 2024-05-17 05:00]

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்றும் கேட்டேன்.



தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார் அமெரிக்க தூதுவர்! Top News
[Friday 2024-05-17 05:00]

தமிழ்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பது பலவீனத்தையே வெளிப்படுத்தும் எனவும், கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மாத்திரமே தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தம்மால் பேசமுடியும் என அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்,தெரிவித்துள்ளார்.



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டம்! Top News
[Friday 2024-05-17 05:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்தின்,தொடக்கக் கூட்டம் மே 17 முதல் 19 வரை நியூயார்க்கில் நடைபெறுகிறது.



சுமைகாவியின் கன்னத்தில் அறைந்த அமைச்சர்!
[Friday 2024-05-17 05:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் சுமைகாவி ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியுள்ளார்.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!
[Friday 2024-05-17 05:00]

முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.



மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளராக போட்டியிட தமிழர் தெரிவு!
[Friday 2024-05-17 05:00]

கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஜூன் 4ஆம் திகதி உயர்தர வகுப்புகள் ஆரம்பம்!
[Friday 2024-05-17 05:00]

நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா