Untitled Document
May 4, 2024 [GMT]
படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
[Thursday 2024-04-25 06:00]


2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும்  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும்  ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் புதன்கிழமைஇடம்பற்ற 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

5 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி யார்?ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்விகள் இங்கு எழுப்பப்படுகின்றன. இலங்கையைப்பொறுத்த வரையில் இலங்கையில் ஆட்சியாளர்களுடைய ஆசிர்வாதத்துடன் ஆட்சியாளர்களின் ஆலோசனைகளுக்கமைவாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக ஜோசப்பரராஜசிங்கம், ரவிராஜ் எம்.பிக்கள். சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் பல்வேறு ஆதாரங்கள், தடயங்கள் கிடைக்கப் பெற்றன. ஆனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. தண்டனை வழங்க முடியவில்லை என்றால் அது ஆட்சியாளர்களின் ஆலோசனைப்படி அந்தக்கொலைகள் நடைபெற்றன.

குறிப்பாக 2005,2006 ஆண்டு காலப்பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனையில் அந்த இரு எம்.பி.க்களும் கொல்லப்பட்டார்கள்.

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு மிகபெரிய யுத்தம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பல நாடுகளின் உதவியுடன் மிகக்கொடூரமாக கொல்லப்பட்டார்கள். அப்போதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய இருந்தார். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் கத்தோலிக்க மக்களையும் அமெரிக்கா. பிரிட்டானிய சுற்றுலா பயணிகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டன என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ரணில் - பசில் இன்று மீண்டும் சந்திப்பு!
[Saturday 2024-05-04 16:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.



தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்த கலந்துரையாடல் தொடர்கிறது!
[Saturday 2024-05-04 16:00]

பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.



வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கிறது அரசாங்கம்!
[Saturday 2024-05-04 16:00]

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குவதற்காக அரசாங்கம் அரசசொத்துக்களை பயன்படுத்துகின்றது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.



15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?
[Saturday 2024-05-04 16:00]

எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.



ஜனாதிபதி தேர்தலில் குமார் குணரட்ணமும் போட்டி?
[Saturday 2024-05-04 15:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்தார்.



ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கொழும்பு வந்தார்!
[Saturday 2024-05-04 15:00]

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.



வெற்றிபெறும் வேட்பாளரையே மொட்டு முன்னிறுத்தும்!
[Saturday 2024-05-04 15:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



அதிபரை பல்லக்கில் சுமந்த மாணவர்களின் பெற்றோர்! Top News
[Saturday 2024-05-04 15:00]

வவுனியா - புதுக்குளம் ஆரம்பப் பாடசாலையின் அதிபரின் பணி ஓய்வு நாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வுகள் குறித்த பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிபரை பல்லக்கில் சுமந்து செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.



முழங்காவிலில் கடற்படைச் சிப்பாய் உயிர்மாய்ப்பு!
[Saturday 2024-05-04 15:00]

முழங்காவில் கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவர் நேற்றைய தினம் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடல் பரப்பில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.



ஆவரங்காலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!
[Saturday 2024-05-04 15:00]

யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



பொதுவேட்பாளராக களமிறங்கவுள்ள ரணில்! - தருணம் பார்த்து காத்திருக்கிறார்.
[Saturday 2024-05-04 05:00]

இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.



13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது பற்றி சஜித் எம்மை அழைத்துக் கூற வேண்டும்!
[Saturday 2024-05-04 05:00]

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றால், அதனை மனோ கணேசன் ஊடாக சொல்லக்கூடாது, தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.



படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி யாழ்ப்பாணத்தில் கோரி போராட்டம்! Top News
[Saturday 2024-05-04 05:00]

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக நேற்று மாலை 3 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



யாழ்ப்பாணத்தில் சர்வதேச சிலம்பம் போட்டி! - இன்று ஆரம்பம்.
[Saturday 2024-05-04 05:00]

உலகில் தமிழுக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம் என்பதில் தான் பெருமை அடைவதாக உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.



புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்த சீனா அழுத்தம்!
[Saturday 2024-05-04 05:00]

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடனை மறுசீரமைப்பதற்கும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது.



திருகோணமலையில் இந்தியத் தூதுவர்! Top News
[Saturday 2024-05-04 05:00]

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் மற்றும் எண்ணெய் தாங்கி முனையம், விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சென்று பார்வையிட்டுள்ளார்.



10 ஆயிரம் பரீட்சார்த்திகளுக்கு விண்ணப்பிக்காத பாடங்களுக்கு அனுமதி அட்டை!
[Saturday 2024-05-04 05:00]

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமான தனிப்பட்ட பரீட்சார்த்திகள் , தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்திற்கான அனுமதி அட்டையை பெற்றதால், சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.



சிஐடியிடம் மைத்திரி நேற்றும் வாக்குமூலம்!
[Saturday 2024-05-04 05:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 2 மணிநேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பிலே அவர் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சியில் ஐசுடன் இருவர் கைது!
[Saturday 2024-05-04 05:00]

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!
[Saturday 2024-05-04 05:00]

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் உள்ள பாழடைந்த வெற்றுக்காணியொன்றினுள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா